ரஜினி சந்திப்பு.. நான் சங்கி என்றால்.. அவரை வைத்து படம்.. கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நீங்க யார்? - சீமான் விளாசல்
ரஜினி சந்திப்பு.. நான் சங்கி என்றால்.. அவரை வைத்து படம்.. கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நீங்க யார் என சீமான் சரமாரியாகப்பேசியுள்ளார்.

ரஜினியை சந்தித்ததால் நான் சங்கி என்றால் அவரை வைத்து படமெடுத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நீங்கள் யார் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
செங்கல்பட்டில் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடத்தப்பட்டது. அதில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘’இந்த தேர்தலில் வென்று வந்த இலங்கை அதிபர் அனுர திசநாயக்க அறிவிச்சிருக்கார், நீங்கள் சுதந்திரமாக உங்கள் மாவீரர் தினத்தைக் கொண்டாடி அழலாம். இவ்வளவு காலம் போராடி, 50 ஆயிரம் மாவீரர்கள் உயிர் ஈகம் செய்து, பல லட்சக்கணக்கான மக்கள் பலியாகி வீரம் செறிந்த விடுதலைக்கான போரை செய்த நாம் பெற்ற சுதந்திரம், என் அன்புச் சொந்தங்களே, சுதந்திரமாக அழலாம் என்பது தான்.
இந்தத் துயரைத் துடைக்க மானத்தமிழ்ப் பிள்ளைகள் எழவேண்டும் என்பதை இதயச்சுவற்றில் எழுதி வைக்கணும்.