‘கமல் மன்னிப்பு கேட்கணுமா.. இதுவா உங்க வேலை…’ - கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘கமல் மன்னிப்பு கேட்கணுமா.. இதுவா உங்க வேலை…’ - கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

‘கமல் மன்னிப்பு கேட்கணுமா.. இதுவா உங்க வேலை…’ - கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 17, 2025 01:34 PM IST

உச்ச நீதிமன்றம், கமல்ஹாசனின் 'தக் லைஃப்' படத்தை கர்நாடகாவில் வெளியிட உத்தரவிட்டது.

 ‘கமல் மன்னிப்புக் கேட்கணுமா.. இதுவா உங்க வேலை…’ - கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
‘கமல் மன்னிப்புக் கேட்கணுமா.. இதுவா உங்க வேலை…’ - கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி! (PTI)

மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட விதிக்கப்பட்ட தடையை “நீதித்துறைக்கு அப்பாற்பட்ட தடை” என்று தெரிவித்த நீதிபதி உஜ்ஜல் புயான் மற்றும் நீதிபதி மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய திரைப்பட சான்றிதழ் சான்றிதழ் பெற்ற எந்தவொரு படமும் வெளியிடப்பட வேண்டும் என்றும் அதன் திரையிடலை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியது.

மேலும் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது கர்நாடக உயர்நீதிமன்றத்தின் வேலை அல்ல.. கமல்ஹாசன் பேச்சுக்காக அவரை மிரட்டுவதை அனுமதிக்க முடியாது. உயர்நீதிமன்றம் எப்படி அப்படி கூறலாம்?என்று கூறியிருக்கிறது.

மன்னிப்புக்கேட்க மறுப்பு

முன்னதாக, கமல்ஹாசன் நடித்து, மணி ரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ திரைப்படம் கடந்த ஜூன் 5 அன்று வெளியானது. இதற்கிடையே நடந்த அந்தப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில், கமல் கன்னட மொழி குறித்து பேசியது சர்ச்சையானது. இதற்காக அவர் மன்னிப்புக்கேட்க வற்புறுத்தப்பட்டார்.

ஆனால், மன்னிப்புக் கேட்க மறுத்து விட்டார். இந்த நிலையில் கர்நாடகா வர்த்தக சபை கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியிட தடை விதித்தது. இதனை எதிர்த்து கமல்ஹாசன் கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடினார். அங்கும் அவர் மன்னிப்புக்கேட்க வற்புறுத்தப்பட்டார். ஆனால், அதன்பின்னரும் கமல்ஹாசன் மன்னிப்புக்கேட்கவில்லை. இதனால் கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியாக வில்லை.

பொதுநல மனு

இந்தத்தடையை எதிர்த்து மகேஷ் ரெட்டி உச்சநீதிமன்றத்தில் பொது மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ‘மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (CBFC) ஒப்புதல் இருந்தும், சில சக்திகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள் காரணமாக கர்நாடகாவில் படம் வெளியாகாமல் தடுக்கப்படுவதாக குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், நடிகர் கமல்ஹாசனின் கன்னட மொழி குறித்த கருத்துக்களால் உருவாக்கப்பட்ட இந்த அச்சுறுத்தல்களால் படத்திற்கு சட்டப்பூர்வமாக தடை எதுவும் இல்லாதபோதும், படம் அதிகாரப்பூர்வமற்ற தடைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.