'நயன்தாராவுக்கு நாக்குல சனி.. பாம்பு தோஷம் இருக்கு.. அது இப்போ தலை விரிச்சு ஆடுது'- சுசித்ரா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'நயன்தாராவுக்கு நாக்குல சனி.. பாம்பு தோஷம் இருக்கு.. அது இப்போ தலை விரிச்சு ஆடுது'- சுசித்ரா

'நயன்தாராவுக்கு நாக்குல சனி.. பாம்பு தோஷம் இருக்கு.. அது இப்போ தலை விரிச்சு ஆடுது'- சுசித்ரா

Malavica Natarajan HT Tamil
Published Dec 19, 2024 06:34 PM IST

நயன்தாராவின் நாக்கில் சனி இருக்கிறது. அதனால் தான் என்ன பேசினாலும் மாட்டிக் கொள்கிறார். அவருக்கு பாம்பு தோஷமும் உள்ளது என பாடகி சுசித்ரா விமர்சித்துள்ளார்.

'நயன்தாராவுக்கு நாக்குல சனி.. பாம்பு தோஷம் இருக்கு.. அது இப்போ தலை விரிச்சு ஆடுது'- சுசித்ரா
'நயன்தாராவுக்கு நாக்குல சனி.. பாம்பு தோஷம் இருக்கு.. அது இப்போ தலை விரிச்சு ஆடுது'- சுசித்ரா

அதில், "நயன்தாரா கடந்த 10 வருஷமா பாலிவுட்டில் நுழைய நிறைய முயற்சி பண்ணிருக்கலாம். இல்லை ஹாலிவுட்டில் கூட நுழைய முயற்சி பண்ணிருக்கலாம். பல தொழிலதிபர்களை கல்யாணம் பண்ணிக்க கூட முயற்சி பண்ணிருக்கலாம்.

நாக்குல சனி

இந்த விஷயம் எதுவுமே நடக்காததுனால தான் இவங்க விக்னேஷ் சிவன கல்யாணம் பண்ணிருக்காங்க. அந்த டாக்குமெண்ட்ரில கூட நயன்தாரா பேசுனது அப்டி தான் இருந்தது. நயன்தாராவுக்கு நாக்குல சனி இருக்கு. அவங்க பொய் சொன்னாலும் ஏதாவது ஒரு இடத்துல மாட்டிக்குறாங்க. அவங்க ஜாதகத்த பாத்தா தெரிஞ்சிடும். இவங்களுக்கு சர்வ தோஷம் இருக்கலாம். இப்போ அது தலைவிரிச்சு ஆடுது.

கௌரவ குறைச்சலா?

சினிமாவுல 20 நிமிஷம் சிரிச்ச மாதிரி நடிக்க முடிஞ்சவங்களால ஒரு கல்யாண டாக்குமெண்ட்ரில ஒன்றரை மணி நேரம் இண்டர்வியூ கொடுக்க முடியுமா?

அவங்களுக்கு சொந்தமா இருக்குறவங்களுக்கு மட்டும் அவங்க லேடி ஹிட்லரா நடந்துக்கும் படிய மாத்தி மாத்தி வச்சிப்பாங்க.

தனுஷ் கிட்ட என்ஓசி வாங்க விக்னேஷ் சிவன் 2 வாரமா அலைஞ்சிட்டு இருந்தாரு. அப்போ அவரால முடியலன்னு தெரிஞ்சு தான் நான் தனுஷ் மேனேஜர்க்கு கால் பண்ணேன். அப்போ கூட என்னால எல்லாம் கால் பண்ண முடியாதுன்னு தான் சொன்னேன்னு சொல்லிருக்காங்க. இது அவங்களுக்கு அவ்ளோ கௌரவ குறைச்சலா? இப்படி எல்லாம் அவங்க பேசுறதுல ரொம்ப திமிரு தெரியுதுங்க.

தனுஷ் காலுல விழ வேண்டியது தான

நயன்தாரா ஒன்னும் பெரிய ஆள் கிடையாது. அவங்க பண்ண படத்துல எபிக்கான படம்ன்னு எதுவும் இல்ல. கோலமாவு கோகிலா சொல்லலாம், நானும் ரவுடி தான் ஹிட் ஆனதுக்கு காரணம் விஜய் சேதுபதி தான்.

உங்களுக்கு அந்த 3 செகண்ட் வீடியோ அவ்ளோ முக்கியம்ன்னா தனுஷ் காலுல விழுந்து வாங்க வேண்டியது தான. அந்த 3 செகண்ட் டாக்குமெண்ட்ரில எதையும் மாத்தலங்க. இது ஜோதிகா கங்குவா படம் நல்லா இருக்குன்னு சொல்ற மாதிரி இருக்கு.

இதுல இருந்து தான் உங்க லவ் ஸ்டார்ட் ஆச்சுன்னா அத வாயில சொன்னா என்ன. அந்த படத்த எல்லாரும் தான் பலமுறை பாத்துட்டாங்க. அது தேஞ்சு பேன பழைய க்ளிப் தான. இந்த க்ளிப் எல்லாம் உங்க டாக்குமெண்ட்ரிய விட வைரல்.

விக்னேஷ் சிவன் கண்ணுக்கு மட்டும் தான் தெரியும்

நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம்ன்னு சொன்னாலும் அவங்க படம், டாக்குமெண்ட்ரி, பாட்டு எல்லாத்துலயும் அது வருது. இந்த உலகத்துலயே நயன்தாராவ லேடி சூப்பர் ஸ்டார்ன்னு நெனக்குற ஒரே ஆள் விக்னேஷ் சிவன் மட்டம் தான். யாருமே அப்படி அவங்கள லேடி சூப்பர் ஸ்டார்ன்னு நெனக்காததுனால இனி தாராளமா அவங்கள வெறும் நயன்தாரான்னே படத்துல யூஸ் பண்ணிக்கலாம்.

விக்னேஷ் சிவன் வீட்டு மாப்பிள்ளையா இருக்க முடிவு பண்ணிட்டாரு. அது அவர் குடும்பத்தோட எடுத்த முடிவு. இதுக்கு எதிரா இருந்த ப்ரண்ட்ஸ் எல்லாரையும் ரெண்டு பேருமே கட் பண்ணிட்டாங்க. இப்போ எனக்கு தெரிஞ்சு ரெண்டு பேருக்குமே ப்ரண்டஸ்ன்னு யாருமே இல்ல.

தனி ராஜ்ஜியம்

நயன்தாரா சில பேரோட நடிக்கும் போது மட்டும் தான் தன்னோட நடிப்ப அள்ளி அள்ளி தருவாங்க. இல்லைன்னா கஞ்ச தனம் தான். தனுஷுக்கா ஃபிரியா டான்ஸ் ஆட ஓகே சொன்னாங்களே அப்போ என்ன தனுஷ் ஏழையாவ இருந்தாரு. இந்த பாட்டுக்கு யார் டான்ஸ் ஆடி இருந்தாலும் ஹிட் ஆகிருக்கும்.

நயன்தாரா அவங்க சொல்ற மாதிரி ரொம்ப சாஃப்ட்டான ஆள் இல்ல. இது பல இடத்துல வெளிய வந்துருக்கு. அவங்க வாயக் கொடுத்து வாங்கிக் கட்டிக்குறாங்க. தனுஷ் எப்படி ஒரு தனி ராஜ்ஜியம் நடத்துறாருன்னு நயன்தாரா சொன்னாங்களோ அதே மாதிரி தான் நயன்தாராவும் ராஜ்ஜியம் நடத்திட்டு இருக்காங்க. இதுல நிறைய பேர அவங்க அடிமை மாறி தான் நடத்திட்டு வராங்க. இதுதான் அவங்களோச மெச்சூரிட்டி லெவல் எனவும் விமர்சித்துள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.