Sarathkumar Interview: ‘அரவணைப்பின் அச்சாணி’.. ‘முன்னாள் மனைவியும் ராதிகாவும் அப்படி வந்து’ - ராதிகா குறித்து சரத்!
நான் என்னுடைய முன்னாள் மனைவியை விட்டு பிரிந்து வந்தாலும், அவரையும் அரவணைத்து, அவருக்கு பிறந்த என்னுடைய குழந்தைகளையும் அரவணைத்து, இந்த குடும்பத்தை சரியான நேர்கோட்டில், ஒன்றாக இருக்கும் படியாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.

சரத்குமார் பேட்டி!
சரத்குமார் கடந்த வருடம் லிட்டல் டாக்ஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், தன்னுடைய மனைவி ராதிகா குறித்தும், முன்னாள் மனைவி சாயா குறித்தும் பேசி இருந்தார்.
அதில் அவர் பேசும் போது, “கல்யாண நாளன்று நான் சரியாகத்தான் வந்தேன். ஆனால் நான் மேடைக்கு, 10, 15 நிமிடங்கள் தாமதமாக வந்தேன் என்று ராதிகா சொன்னார். இதையடுத்து, நான் தப்பிக்க முயற்சி செய்திருக்கிறேனோ என்று நினைத்ததாகவெல்லாம், அவர் என்னை கிண்டல் அடித்தார்.
இன்றும் பல குடும்பங்கள் இணைகின்றன, பிரிகின்றன. முதலில் ராதிகா என்னுடைய நண்பர். அதன் பின்னர் தான் அவர் என்னுடைய மனைவி. அவர் என்னுடைய குடும்பத்தை புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்தினார்.