Vadivelu: 'காமெடி சொன்னா சிரிப்பே வரலன்னு அசிங்கப்படுத்தி.. ஷூட்டிங்கில் வடிவேலு படுத்திய பாடு..’ - அரசு டைரக்டர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vadivelu: 'காமெடி சொன்னா சிரிப்பே வரலன்னு அசிங்கப்படுத்தி.. ஷூட்டிங்கில் வடிவேலு படுத்திய பாடு..’ - அரசு டைரக்டர்

Vadivelu: 'காமெடி சொன்னா சிரிப்பே வரலன்னு அசிங்கப்படுத்தி.. ஷூட்டிங்கில் வடிவேலு படுத்திய பாடு..’ - அரசு டைரக்டர்

Kalyani Pandiyan S HT Tamil
Jan 12, 2025 02:23 PM IST

‘அவர்களும், வடிவேலுக்கு பயந்து சிரிப்பு வரவில்லை என்று கூறினார்கள். எனக்கு இதைக் கேட்டவுடன் மிகவும் அப்செட் ஆகிவிட்டது. நான் உடனே வடிவேலுவை இல்லை; இது நன்றாக வரும் என்று எவ்வளவோ சம்மதிக்க வைத்தேன்.’ - அரசு டைரக்டர் சுரேஷ்!

Vadivelu: 'காமெடி சொன்னா சிரிப்பே வரலன்னு அசிங்கப்படுத்தி.. ஷூட்டிங்கில் வடிவேலு படுத்திய பாடு..’ - அரசு டைரக்டர்
Vadivelu: 'காமெடி சொன்னா சிரிப்பே வரலன்னு அசிங்கப்படுத்தி.. ஷூட்டிங்கில் வடிவேலு படுத்திய பாடு..’ - அரசு டைரக்டர்

கிளைமாக்ஸ் வரை கொண்டு வாருங்கள்

இது குறித்து அவர் பேசும் போது, ‘அரசு திரைப்படத்தில் வடிவேலு நடித்த கதாபாத்திரத்தில் முதலில் விவேக்தான் நடிப்பதாக இருந்தது. அவரிடம் சென்று நான் கதையை சொன்ன பொழுது, முதல் பாதி வரைக்கும் தான் நான் இருக்கிறேன். இரண்டாம் பாதியில் என்னை காணவில்லை. ஆகையால் என்னை கிளைமாக்ஸ் வரை கொண்டு வாருங்கள் என்றார்.

அதற்கு நான் படம் இரண்டாம் பாதிக்கு மேலே வேறு ஜானருக்கு சென்று விடும். அப்படி இருக்கும் பொழுது, உங்களை கிளைமாக்ஸ் வரை கொண்டு வந்தால், அது சரியாக இருக்காது என்றேன். இதையடுத்து அவர் நாம் அடுத்த படத்தில் இணையலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டார். இந்த நிலையில்தான் வடிவேலுவை கேட்கலாம் என்றார்கள். அக்ரஹார மக்கள் வேறு மாதிரியாக இருப்பார்கள். அப்படி இருக்கும் போது, வடிவேலு அதில் பொருந்துவாரா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. இருப்பினும் அனைவரும் கேட்டுப்பார்க்கலாம் என்றார்கள்.

வடிவேலுவை உள்ளே கொண்டு வந்தோம்

இதையடுத்து தயாரிப்பாளரை சம்மதிக்க வைத்து, வடிவேலுவை உள்ளே கொண்டு வந்தோம். வடிவேலுக்கான அட்வான்ஸ் தொகையெல்லாத்தையும் செட்டில் செய்து அவரை கமிட் செய்து விட்டோம். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துவிட்டார். 

அவரிடம் சென்று படத்தின் காமெடிகளை சொன்னால், அவருக்கு அவை எதுவுமே பிடிக்கவில்லை. உடனே அவர் என்ன எனக்கு சிரிப்பே வரவில்லை. இதற்கு தான் நான் என்னுடைய ஆட்களை வைத்து காமெடி டிராக்கை ரெடி செய்ய வேண்டும் என்று நினைப்பேன். அந்த காமெடிகளை அவர் தன்னை சுற்றி இருந்தவர்களிடம் சொல்லி, இவர் சொல்வது உங்களுக்கு சிரிப்பை வர வைக்கிறதா என்று கேட்டார். 

சம்மதிக்க வைத்தேன்.

அவர்களும், வடிவேலுக்கு பயந்து சிரிப்பு வரவில்லை என்று கூறினார்கள். எனக்கு இதைக் கேட்டவுடன் மிகவும் அப்செட் ஆகிவிட்டது. நான் உடனே வடிவேலுவை இல்லை; இது நன்றாக வரும் என்று எவ்வளவோ சம்மதிக்க வைத்தேன். இதையடுத்து நான் சரத்குமார் சாரிடம் விஷயத்தை சொன்னேன். 

அவர் நீங்கள் சொல்லும் பொழுது நன்றாகதான் இருந்தது என்று சொன்னார்; அதற்கு நான் ஆனால் வடிவேலு அதற்கு ஒத்துக்கொள்ள மறுக்கிறார் என்று சொல்ல, சரத்குமார் அவரை அழைத்து என்ன ஆயிற்று என்று கேட்டார். உடனே வடிவேலு எனக்கு இவர் சொன்னது சிரிப்பை வரவழைக்க வில்லை என்று கூறினார். இதையடுத்து சரத்குமார் வடிவேலுவிடம், இப்போது நடியுங்கள் ஒருவேளை அது நன்றாக வரவில்லை என்றால், ரீஷூட் செய்து கொள்ளலாம் என்றவுடன், வேண்டா வெறுப்பாக நடித்தார்.

 

படப்பிடிப்பின் போது ஒவ்வொரு காட்சியின் போதும் அவர் என்னிடம் கடுமையாக கோபப்படுவார்; ஆனால் அவர் அதை நடிப்பில் காட்டவில்லை; நான் சொன்னதை எனக்கு அழகாக நடித்துக் கொடுத்து சென்று விட்டார்; அந்த படத்தில் அக்ரஹாரத்தை விட்டு கோட் ஷூட் அணிந்து கொண்டு வடிவேலு செல்வது போல காட்சி ஒன்று இருக்கும்.

அதுதான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட அவருக்கான கடைசி காட்சி. அந்த காட்சியின் போது அவர் எங்களிடம் சொல்லாமலேயே, காரில் ஏறிச் சென்று விட்டார். அதன் பின்னர் அவர் டப்பிங் வந்தார். காட்சிகளை பார்த்து அங்கு இருந்தவர்கள் சிரிக்க, என்னை செல்லம் என்று அழைத்த வடிவேலு, இது வேறொரு ஸ்டைலாக இருக்கிறது என்று சொல்லி, கிட்டத்தட்ட 7 மணி நேரம் எனக்காக டப்பிங் செய்து கொடுத்து சென்றார்’ என்று பேசினார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.