Animal Movie: ‘படத்தை பார்த்துவிட்டு 40 நிமிடங்கள் போனில் பேசிய ரன்வீர்’- அனிமல் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Animal Movie: ‘படத்தை பார்த்துவிட்டு 40 நிமிடங்கள் போனில் பேசிய ரன்வீர்’- அனிமல் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா பேட்டி!

Animal Movie: ‘படத்தை பார்த்துவிட்டு 40 நிமிடங்கள் போனில் பேசிய ரன்வீர்’- அனிமல் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா பேட்டி!

Marimuthu M HT Tamil Published Feb 04, 2024 03:36 PM IST
Marimuthu M HT Tamil
Published Feb 04, 2024 03:36 PM IST

ரன்வீர் சிங் தனக்கு அனுப்பிய செய்தியைப் பற்றி சந்தீப் ரெட்டி வாங்கா திறந்து வைத்தார், அது மிகவும் விரிவானது என்று கூறினார், அது அவரை விலங்கைப் பற்றி மேலும் சிந்திக்க வைத்தது.

அனிமல் படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு சந்தீப் ரெட்டி வாங்கா மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் போனில் பேசியுள்ளனர்.
அனிமல் படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு சந்தீப் ரெட்டி வாங்கா மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் போனில் பேசியுள்ளனர்.

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை வைத்து, சந்தீப் ரெட்டி வாங்கா(அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கியவர்) இயக்கிய அனிமல் திரைப்படம், கடந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர்களில் ஒன்றாகும். இப்படத்தின் ரன்பீர் கதாநாயகனாகவும், ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். இப்படத்தில் கொடூரமான ஆணின் மனோபாவத்தையும் மனைவியை அடக்கியாளும் கணவராகவும் ரன்பீர் கபூர் நடித்திருந்தார். இதற்காக அவரும் அப்படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். இருப்பினும், பொதுவான ரசிகர்கள் இப்படத்தை ஏற்றுக்கொண்டனர். 

அண்மையில் தைனிக் பாஸ்கர் ஊடகத்திற்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா சிறப்புப் பேட்டியொன்றைக் கொடுத்துள்ளார். அப்போது, அனிமல் படம் பற்றி ஏதேனும் கருத்து இருக்கிறதா என்று கேட்டபோது, ‘' படம் தொடர்பாக நிறைய கருத்துகள் உள்ளன. ஆனால், ரன்வீர் சிங் பற்றி பல நினைவுகள் வெளியில் வருகின்றன’’ என்றார்.  

ரன்வீர் சிங் பற்றி இயக்குநர் சொன்னது என்ன?

மேலும், தைனிக் பாஸ்கர் ஊடகத்திடம் பேசிய இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா, ‘’ அனிமல் திரைப்படம் வெளியாகி 40 நாட்களைக் கடந்துவிட்டது. ரன்வீர் சிங்கிடம் இருந்து கிடைத்த வரவேற்பு என்னை சிந்திக்க வைத்தது. அவர் ஒரு நீண்ட கடிதத்தை டைப் செய்து அனுப்பியிருந்தார். நான் அதை ஏற்கனவே 3 முதல் 4 முறை படித்தேன். நான் அதுபற்றி அதிகம் வெளியில் சொல்ல விரும்பவில்லை. ஆனால், அந்த வார்த்தைகள் என்னை இயக்குநராக மிகவும் உற்சாகப்படுத்தியது. அவர் சொன்னபோது தான், 'ஓ, இதுவும் படத்தில் இருக்கிறதா?' என்று நினைத்தேன். மேலும் அனிமல் படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு, சுமார் 40 நிமிடங்கள் ரன்பீர் கபூர் என்னிடம் போனில் பேசினார். அவற்றையெல்லாம் மறக்கமுடியாது’’ என்றார்.  

அனிமல் படம் எத்தகையது:-

மகனுக்கும் அப்பாவுக்கும் இடையிலான உறவை அடிப்படையாகக் கொண்டது, அனிமல் திரைப்படம். இப்படத்தில் ரன்பீர் கபூர் மகனாகவும், அனில் கபூர் தந்தையாகவும் நடித்துள்ளனர். ரன்பீரின் மனைவியாக ராஷ்மிகா மந்தனா தோன்றுகிறார். இப்படத்தில் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டு ஜனவரி 26ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. இப்படம் ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியானது.

அனிமல் திரைப்படத்தின் OTT பதிப்பு தியேட்டர்களில் இருப்பதை விட சுமார் 8 நிமிடங்கள் அதிகமாக இருக்கும். சுமார் 3 மணி நேரம் 30 நிமிடங்கள் இயக்க நேரத்துடன் ஓடிடியில் அனிமல் திரைப்படம் ரிலீஸாகியுள்ளது. தியேட்டர் பதிப்பிற்காக வெட்டப்பட்ட சுமார் 8 நிமிட காட்சிகள் ஓடிடி பதிப்பில் சேர்க்கப்படும் என்று இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா முன்னதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக இப்படம் திரையரங்குகளில் வெளியாகி 900 கோடி ரூபாய்க்கும் வசூலித்து சாதனைப் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.