Dil Raju: ‘25 வருடத்தில் இப்படி ஒரு தோல்வியை பார்த்தது இல்லை’ - சாகுந்தலம் படத்தால் புலம்பும் தில் ராஜூ!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dil Raju: ‘25 வருடத்தில் இப்படி ஒரு தோல்வியை பார்த்தது இல்லை’ - சாகுந்தலம் படத்தால் புலம்பும் தில் ராஜூ!

Dil Raju: ‘25 வருடத்தில் இப்படி ஒரு தோல்வியை பார்த்தது இல்லை’ - சாகுந்தலம் படத்தால் புலம்பும் தில் ராஜூ!

Kalyani Pandiyan S HT Tamil
Published May 04, 2023 03:25 PM IST

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட என பான் இந்தியா திரைப்படமாக 3டி தொழில்நுட்பத்தில் வெளியான இந்தத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று படுதோல்வி அடைந்தது.

Producer Dil Raju
Producer Dil Raju

மகாபாரதத்தில் இடம் பெற்ற சகுந்தலா, துஷ்யந்தா காதல் கதையை வைத்து இயக்குநர் குணசேகர் இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்தத் திரைப்படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க, துஷ்யந்த் வேடத்தில் மலையாள நடிகர் தேவமோகனும் நடித்து இருந்தார். 

இவர்களுடன் மோகன் பாபு, கௌதமி, ஈஷார் ரெப்பா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். தெலுங்கில் பிரபல தயாரிப்பாளரும், தமிழில் விஜயை வைத்து ‘வாரிசு’ திரைப்படத்தை தயாரித்தவருமான தில் ராஜூ குணசேகர் தனயா நீலிமா குணா உடன் இணைந்து இந்தத்திரைப்படத்தை தயாரித்து இருந்தார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட என பான் இந்தியா திரைப்படமாக 3டி தொழில்நுட்பத்தில் வெளியான இந்தத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று படுதோல்வி அடைந்தது. 

இந்த திரைப்படம் 50 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படும் நிலையில், முதல் வாரத்தில் 10 கோடி ரூபாயை கூட வசூல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னுடைய 25 வருட திரைப்பயணத்தில் இப்படிப்பட்ட தோல்வியை தான் சந்தித்தது இல்லை என்று தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது,  “நான் 50க்கும் மேற்ப்பட்ட படங்களை நான் தயாரித்து இருக்கிறேன். இதில் 4 அல்லது 5 படங்கள் மட்டுமே  மோசமான வசூலை பெற்றிருக்கிறது. என்னுடைய 25 வருட திரைப்பயணத்தில் இல்லாத பெரிய தோல்வியை சாகுந்தலம் படம் தந்துள்ளது.ஏதேனும் சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால் நான் அதை ஏற்றுக்கொள்வேன். நான் அந்த திரைப்படம் மக்களுக்கு பிடிக்கும், மக்கள் படத்தை கொண்டாடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் என்னுடைய எண்ணம் சாகுந்தலம் திரைப்படத்தில் ஈடேறவில்லை.” என்று பேசி இருக்கிறார்.