மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்படும் 'ஏ மாயம் சேசாவே'.. மீண்டும் ஒர்க் அவுட் ஆகுமா மேஜிக்? ஆர்வத்தில் ரசிகர்கள்!
சமந்தா- நாக சைதன்யா வாழ்க்கையை மாற்றிப் போட்ட படமான ஏ மாயா சேசாவே படம் ரீ -ரிலீஸ் செய்யப்படுவதாக கூறி ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்படும் 'ஏ மாயம் சேசாவே'.. மீண்டும் ஒர்க் அவுட் ஆகுமா மேஜிக்? ஆர்வத்தில் ரசிகர்கள்!
சமந்தா மற்றும் நாக சைதன்யா வாழ்க்கையில் மிக முக்கியமான படம் என்றால் அது 'ஏ மாயா சேசாவ்' தான். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தமிழில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா என்ற பெயரில் எடுக்கப்பட்ட படம் தெலுங்கில் இந்தப் பெயரில் வெளியானது.
கௌதம் மேனனின் மேஜிக்
இந்தப் படம் தான் சினிமா உலகில் சமந்தாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தியது. அத்தோடு நில்லாமல், தெலுங்கு சினிமாவில் நாக சைதன்யாவிற்கு ஒரு லவ்வர் பாய் இமேஜும் கிடைக்க காரணமாக அமைந்தது. இந்தப் படம் தமிழிலும், தெலுங்கிலும் மெகா ஹிட் அடித்தது.