‘59 வயசாச்சு.. உடலில் அவ்வளவு பிரச்சினைகள் இருக்கு.. கல்யாணம் பண்ணி பிரிஞ்சா சொத்துல பாதி போயிரும்’ - சல்மான்கான்!
சல்மான் கான் திருமணம் மற்றும் 59 வயதில் பணிபுரியும் சந்திக்கும் போது சவால்கள் குறித்து பேசி இருக்கிறார்.

‘59 வயசாச்சு.. உடலில் அவ்வளவு பிரச்சினைகள் இருக்கு.. கல்யாணம் பண்ணி பிரிஞ்சா சொத்துல பாதி போயிரும்’ - சல்மான்கான்!
ஹிந்தியில் தி கிரேட் இந்தியன் கபில் ஷோவில் மிகவும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சிக்கு பிரபல நடிகர் சல்மான்கான் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவரது உடல்நிலை பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், அது குறித்து அவர் அந்த நிகழ்ச்சியில் மிகவும் வெளிப்படையாக பேசினார்.
கல்யாணம் ஏன் செய்யவில்லை
நிகழ்ச்சி தொகுப்பாளர் கபில் சர்மா அவர் திருமணம் செய்யாமல் இருப்பது குறித்து கேட்டார். அதற்கு பதிலளித்த சல்மான்கான் ‘ எனக்கு பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்தபோதிலும், நான் 59 வயதிலும் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.
என்னை திருமணம் செய்து கொள்ளும் நபர் என்னை பிரிய முடிவெடுத்து என்னுடைய பாதி பணத்தை எடுக்க முடிவு செய்தால், மீண்டும் முதலில் இருந்து தொடங்குவதற்கு என்னிடம் துணிச்சல் இல்லை’ என்றார்.