‘நோ சொல்றது முக்கியம்..ஃபேமிலி ரொம்ப முக்கியம்..’-சந்தீப் - தீபிகா சர்ச்சைக் குறித்து மறைமுகமாக பேசினாரா சைஃப் அலிகான்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘நோ சொல்றது முக்கியம்..ஃபேமிலி ரொம்ப முக்கியம்..’-சந்தீப் - தீபிகா சர்ச்சைக் குறித்து மறைமுகமாக பேசினாரா சைஃப் அலிகான்?

‘நோ சொல்றது முக்கியம்..ஃபேமிலி ரொம்ப முக்கியம்..’-சந்தீப் - தீபிகா சர்ச்சைக் குறித்து மறைமுகமாக பேசினாரா சைஃப் அலிகான்?

Kalyani Pandiyan S HT Tamil
Published May 31, 2025 03:03 PM IST

குழந்தைகளுடன் செலவிடும் அந்த அரைமணி நேரம் முக்கியமானது. எங்களுக்கு ஆண்டுக்கு நான்கு விடுமுறைகள் கிடைக்கும். என் குழந்தைகள் விடுமுறையில் இருக்கும்போது நான் வேலை செய்வதில்லை.

‘நோ சொல்றது முக்கியம்..ஃபேமிலி ரொம்ப முக்கியம்..’ - சர்ச்சைக்கு மறைமுகமாக பேசிய சைஃப் அலிகான்?
‘நோ சொல்றது முக்கியம்..ஃபேமிலி ரொம்ப முக்கியம்..’ - சர்ச்சைக்கு மறைமுகமாக பேசிய சைஃப் அலிகான்?

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தீபிகா படுகோனை மறைமுகமாக சாடி சந்தீப் ரெட்டி வங்கா பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், ‘ ‘நான் ஒரு நடிகரிடம் ஒரு கதையைச் சொல்லும்போது, அங்கு 100% நம்பிக்கை வைக்கிறேன். எங்களுக்குள் ஒரு சொல்லப்படாத ஒப்பந்தம் இருக்கிறது.

ஆனால், இதனை நீங்கள் செய்ததின் மூலமாக நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்தி விட்டீர்கள்.. ஒரு இளம் நடிகரை கீழறக்குறவதும், கதையை கசிய விடுவதும்தான் உங்களின் பெண்ணியமா? என்று பதிவிட்டு இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தீபிகா பதிலடி

இதற்கு பதிலடி கொடுத்த தீபிகா எனக்கான சம்பளம் கிடைக்கவில்லை. அதனால் நான் வெளியேறி விட்டேன்’ என்று பேசினார். தீபிகாவிற்கு அஜய் தேவ்கன் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மறைமுகமாக நடிகர் சைஃப் அலிகான் பேசி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அண்மையில் அரபு ஊடக உச்சி மாநாட்டில் நடந்த உரையாடலின் போது பேசிய அவர், ‘வேலை முடிந்து தாமதமாக வீட்டிற்கு வந்து குழந்தைகள் தூங்குவதைப் பார்ப்பதை நான் வெறுக்கிறேன். அது வெற்றி அல்ல.

குழந்தைகளுடன் செலவிடும் அந்த அரைமணி நேரம் முக்கியமானது. எங்களுக்கு ஆண்டுக்கு நான்கு விடுமுறைகள் கிடைக்கும். என் குழந்தைகள் விடுமுறையில் இருக்கும்போது நான் வேலை செய்வதில்லை.

அந்த நேரம் புனிதமானது. நான் அம்மா மற்றும் குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டிய வயதில் இருக்கிறேன். இதனால் இந்த விஷயத்தில் நோ சொல்வதே என்னுடைய வெற்றியும் பாக்கியமும்’ என்று பேசினார்.