‘அப்படியே திணறி நின்னேன்.. பாலா அண்ணன் சொன்ன அந்த வார்த்தைதான்.. ஒரே நைட்டில் மொத்த சீனையும்’ - ஆர்.கே. சுரேஷ் பேட்டி!
எனக்கு நடிக்க வேண்டும் என்பது ஒரு கட்டத்தில் மிகவும் தீவிர ஆசையாக மாறியது. இதனையடுத்து நான் கம்பெனி கம்பெனியாக ஏறி என்னைப்பற்றி விவரங்களை கொடுக்க ஆரம்பித்தேன். அப்படித்தான் செல்வராகவன் இயக்கி, தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. - ஆர்.கே. சுரேஷ் பேட்டி!

அப்படியே திணறி நின்னேன்.. பாலா அண்ணன் சொன்ன அந்த வார்த்தைதான்.. ஒரே நைட்டில் மொத்த சீனையும்’ - ஆர்.கே. சுரேஷ் பேட்டி!
தாரைத்தப்பட்டை, மருது, விருமன், காடுவெட்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆர்.கே. சுரேஷ். அடிப்படையில் விநியோகஸ்தராக திரைப்பயணத்தை தொடங்கியவர் தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவர் அண்மையில் டூரிங் டாக்கீஸ் சேனலுக்கு பேட்டிக்கொடுத்தார்.
புதுப்பேட்டை கொடுத்த அனுபவம்
அதில் அவர் பேசும் போது, ‘எனக்கு நடிக்க வேண்டும் என்பது ஒரு கட்டத்தில் மிகவும் தீவிர ஆசையாக மாறியது. இதனையடுத்து நான் கம்பெனி கம்பெனியாக ஏறி என்னைப்பற்றி விவரங்களை கொடுக்க ஆரம்பித்தேன். அப்படித்தான் செல்வராகவன் இயக்கி, தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.