Vijayakanth: புயலாய் மாறிய புலன் விசாரணை.. ‘விஜயகாந்திற்காக 50 லட்சத்தை தூக்கி எறிந்தேன்’ - செல்வமணி பேட்டி
Vijayakanth: ‘எனக்கும் விஜயகாந்த் சாருக்கும் இடையே மன வருத்தம் இருந்தது. அப்போது அங்கிருந்த மேனேஜர்கள் என்னை படம் பார்க்க அனுமதிக்கவில்லை. காரணம் கேட்டால், தியேட்டரில் இடமில்லை என்று கூறி விட்டார்கள்.’ - விஜயகாந்த்

Vijayakanth: புயலாய் மாறிய புலன் விசாரணை.. ‘விஜயகாந்திற்காக 50 லட்சத்தை தூக்கி எறிந்தேன்’ - செல்வமணி பேட்டி
Vijayakanth: ‘புலன் விசாரணை’ திரைப்படம் வெளியாகி 35 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், அப்படத்தின் இயக்குநர் ஆ.கே. செல்வமணி அந்தப்படத்தின் அனுபவங்கள் குறித்து கலாட்டா யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேசி இருக்கிறார்.
ரஜினி திரைப்படம்
அந்தப்பேட்டியில் அவர் பேசும் போது ‘ புலன் விசாரணை திரைப்படத்துடன், ரஜினி சாரின் படமும் ரிலீஸ் ஆனது. ஆனால், அப்போது எனக்கு அது குறித்தான எந்த பயமும் இல்லை. அது பொங்கல் பண்டிகை வேறு; பொங்கல் அன்று முன்பெல்லாம் 10 படங்கள் கூட ரிலீஸ் ஆகும். அதனால், ரஜினி சாருக்கு 60 தியேட்டர்கள் கொடுக்கிறார்கள் என்றால், எங்களுக்கு ஒரு 50 தியேட்டர்கள் கிடைக்கும். அந்த சமயத்தில் சிறுபட்ஜெட் படங்களையும் ரிலீஸ் செய்யலாம், பெரிய பட்ஜெட் படங்களையும் ரிலீஸ் செய்யலாம். சூழ்நிலை நன்றாக இருந்தது.