Suriya 45: கடுப்பாக்கிய தயாரிப்பாளர்.. அப்செட்டான ஆர்.ஜே. பாலாஜி.. சூர்யா 45 படப்பிடிப்பில் நடந்த சம்பவம்
Suriya 45: பிரமாண்ட செட் அமைத்து, அதில் நடிக்க வைப்பதற்கு ஜுனியர் ஆர்டிஸ்டுகளை கேட்ட எண்ணிக்கையில் தயாரிப்பாளர்கள் தரப்பில் தராமல் இருந்துள்ளதாக கூறி சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பை தொடங்காமல் பேக்கப் செய்துள்ளாராம் படத்தை இயக்கி வரும் ஆர்.ஜே. பாலாஜி.

கடுப்பாக்கிய தயாரிப்பாளர்.. அப்செட்டான ஆர்.ஜே. பாலாஜி.. சூர்யா 45 படப்பிடிப்பில் நடந்த சம்பவம்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் கம் இயக்குநராக இருந்து வரும் பாலாஜ சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். சூர்பாய 45 என்ற அழைக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ரெட்ரோ ரிலீஸுக்கு பின் இந்த ஆண்டில் பிற்பகுதியில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷுட்டிங்கை தொடங்காமல் பேக்கப் செய்த ஆர்.ஜே. பாலாஜி
சூர்யா 45 முதல் கட்ட படப்பிடிப்பு கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரண்டாவது கட்டமாக தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னையில் இருக்கும் பிரபல ஸ்டுடியோவில்
பிரமாண்ட செட் அமைத்து ஷுட்டிங் நடந்து வருவதாக கூறப்படுகிறது. படத்துக்காக நீதிமன்றம் செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.