RIP Captain Vijayakanth: 'வாழ்வில் பொய்மையாகக் கூட நடிக்கத் தெரியாத உத்தமர் விஜயகாந்த்' தருமை ஆதீனம் புகழாரம்
RIP Captain:அரசியலில் நேர்மையும் ஆன்மீக பணிவும் சமுதாயத்தின்மீது இரக்கசிந்தனையும் மாற்றாரை மதிக்கும் பணிவும் கொண்ட தூய்மையான அரசியல்வாதியை முன்னாள் எதிர்கட்சித் தலைவரை சினிமாவில் நடிக்க மட்டுமே அறிந்தவர்.

Captain Vijayakanth Passed Away: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக நிறுவனத் தலைவா் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தாா். மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தனது முகநூலில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது.
ஆன்மீகம் கொண்ட அரசியல்வாதியும் நடிகரும் ஆன திரு விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணம் சம்பவித்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தோம். அரசியலில் நேர்மையும் ஆன்மீக பணிவும் சமுதாயத்தின்மீது இரக்கசிந்தனையும் மாற்றாரை மதிக்கும் பணிவும் கொண்ட தூய்மையான அரசியல்வாதியை முன்னாள் எதிர்கட்சித் தலைவரை சினிமாவில் நடிக்க மட்டுமே அறிந்தவர். வாழ்வில் பொய்மையாகக் கூட நடிக்கத் தெரியாத உத்தமர். ஆன்மீகத்தை வாழ்வில்இணைத்தே காரியம் இயற்றும் மாமனிதப் புனிதரை தமிழகம் இழந்துவிட்டதே.
நாம் மதுரையில் இருந்த காலத்தில் அவருடைய தந்தையாருடனாய தொடர்பும் அதுபோது விஜகாந்துடனான தொடர்பு சமீபத்தில் நம்மை சந்தித்து ஆசி பெற்ற திருமதி பிரேமலதா வரை குடும்பமே நம்மோடு தொடர்புடையது. நம்ஆதீன பட்டிணப்பிரவேச பிரச்சனையின் போது முதலாவதாக அறிக்கை கொடுத்து பக்கபலமாக நிகழ்வுக்கு கட்சித் தொண்டர்களை அனுப்பிவைத்தவர்.
தமிழகம் நேர்மையான அரசியல்வாதியை இழந்தது சமுதாயத்தின் இதயம் துடிப்பை நிறுத்திக்கொண்டது. ஆன்மீகம் அக்கறையுள்ளோரை தவிர்க்கவிட்டது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் ஆறுதலை தெரிவிக்கிறோம் ஆன்மா இறையடியில் இளைப்பாற பிரார்த்தனை செய்கிறோம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்