Rip Bhavatharini : பொறுத்துக்க முடியல.. மனம் பதைக்கிறது.. மறைந்த பவதாரணி குறித்து கமல் ஹாசன் உருக்கம்!
Kamal Hassan: மறைந்த பவதாரணி குறித்து கமல் ஹாசன் உருக்கமாக பதிவு ஒன்றை வெளியீட்டு உள்ளார்.

பிரபல சினிமா பின்னணி பாடகியும், இசைஞானி இளையராஜா மகளுமான பவதாரணியின் திடீர் மரணம், ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கல்லீரல் புற்றுநோய் காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிரச்னையை சரிசெய்ய இலங்கை சென்ற பவதாரணி அங்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துவந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.நேற்று இளையராஜா இலங்கை சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று சிகிச்சை பலன் இன்றி நேற்று ( ஜன. 25) மாலை 5.20 மணிக்கு மரணம் அடைந்தார் . நாளை மாலை அவர் உடல் சென்னை வருகிறது.
தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் பாடல் பாடியிருக்கும் இவர், தெலுங்கு, கன்னட சினிமாக்களுக்கு இசையமைத்துள்ளார்.
பவதாரிணி தனது தந்தையான இசைஞானி இளையராஜா, சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரின் இசையமைப்பில் பல பாடல்களை பாடியுள்ளார். பவதாரிணி பாடிய பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியிருப்பதுடன், பாரதி என்ற படத்தில் தந்தை இளையராஜா இசையமைப்பில் பாடிய மயில்போல என்ற பாடலுக்கு தேசிய விருதும் இவருக்கு கிடைத்தது.
தனது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமில்லாமல் பிற இசையமைப்பாளர்களான சிற்பி, தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், ஜிவி பிரகாஷ் குமார் உள்பட இதர இசையமைப்பாளர்கள் இசையமைப்பில் பாடல்களை பாடியுள்ளார். அத்துடன் பவதாரிணி பாடிய பாடல்கள், பல பாடல் வெளியான காலகட்டத்தில் சூப்பர் ஹிட்டானதுடன் தற்போது Underrated ஆகவும் இருந்து வருகிறது.
பவதாரணிக்கு தற்போது 47 வயதாகிறது. சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் பல பாடல்களை பாடி பிரபலமானவர். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்து உள்ளது.
அவரின் மரணம் தொடர்பாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் கமல் ஹாசன் பவதாரணி மரணத்தால் மனம் உடைந்து தனது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
அதில், “ மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக் கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக் கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ முடியாத ஒன்று.
இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல் “ எனக் குறிப்பிட்டு உள்ளார். அவரின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பவதாரணிக்கு தற்போது 47 வயதாகிறது. சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் பல பாடல்களை பாடி பிரபலமானவர். இவர் பாடிய பல பாடல்கள் ஹிட்டானது.
அதில் குறிப்பிடும் படியானவை, உல்லாசம் படத்தில் முத்தே முத்தம்மா, தனுஷ் நடித்த படத்தில் இவர் பாடிய அண்மையில் ஹிட்டான பாடல் ஆத்தாடி, ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி ஆசப்பட்டு காத்திருக்கா டா என்பதாகும். இவர் வித்யாசமான குரல் வளம் கொண்டவர். இவரது குரலின் தனித்தன்மையே அவரது குரலை தனியாக அடையாளப்படுத்தி காட்டிவிடும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்