Rip Bhavatharani: 'உடைந்து அழுத பவதாரணி.. தாங்கி பிடித்த இசைஞானி' வைரல் வீடியோ!
Ilayaraja Daughter Bhavatharani: பவதாரணியின் முதுகில் தட்டி கொடுத்து தேற்றுகிறார். அந்த பாடலை உணர்ச்சி வசத்தால் பாட முடியாமல் தவிக்கும் மகளுடன் சேர்ந்து தானும் பாடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

'உடைந்து அழுத பவதாரணி.. தாங்கி பிடித்த இசைஞானி' வைரல் வீடியோ!
பாடகி பவதாரணி மறைவு இளையராஜாவின் குடும்பத்தை மட்டும் இன்றி ஒட்டு மொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த நிலையில் சிறுவயதில் பவதாரணி மேடையில் தனது தந்தை இளைய ராஜாவுடன் கச்சேரியில் பங்கேற்று பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இளையராஜா இசை அமைத்து பிரபலமான ராஜாவின் ரமண மாலையில் ஆராவமுதே என்ற பாடலை இளையராஜாவும் சிறுமியாக இருந்த பவதாரணியும் சேர்ந்து மேடையில் பாடுகின்றனர். ராஜாவின் இசையில் அந்த பாடலுக்கு என்றுமே தனி ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. கேட்பவர்களை மெய் மறக்கச் செய்யும் பாடல்களில் அதுவும் ஒன்று. அந்த பாடலின் சரணத்தை பாடும் போது பவதாரணி தேம்பி தேம்பி அழுகிறார்.