HT TAMIL EXCLUSIVE: ‘நான் எதையும் எதிர்பாக்கல..என்ன நிம்மதியா வாழவிட்டாலே போதும்..’ -ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ht Tamil Exclusive: ‘நான் எதையும் எதிர்பாக்கல..என்ன நிம்மதியா வாழவிட்டாலே போதும்..’ -ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி!

HT TAMIL EXCLUSIVE: ‘நான் எதையும் எதிர்பாக்கல..என்ன நிம்மதியா வாழவிட்டாலே போதும்..’ -ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Published Mar 12, 2025 05:22 PM IST

HT TAMIL EXCLUSIVE: நான் வாழ்க்கையில எதையுமே மிஸ் பண்ணது கிடையாதுப்பா..வீட்ல சாதரணமான பொண்ணா இருந்திருந்தா கூட, எந்த வேலையும் செஞ்சிருக்க மாட்டேன். அதுக்காக எனக்கு சமையல் பிடிக்காதுன்னு அர்த்தம் கிடையாது. - ரேஷ்மா பசுபுலேட்டி

HT TAMIL EXCLUSIVE: ‘நான் எதையும் எதிர்பாக்கல..
என்ன நிம்மதியா வாழவிட்டாலே போதும்..’ -ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி!
HT TAMIL EXCLUSIVE: ‘நான் எதையும் எதிர்பாக்கல.. என்ன நிம்மதியா வாழவிட்டாலே போதும்..’ -ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி!

பல பெண்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் சட்னி அரைக்கும் போட்டி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய சமையலறைகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பஜாஜ் நிஞ்ஜா, மிலிட்டரி, மற்றும் ஆர்மர் மிக்சர் கிரைண்டர் சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு ரேஷ்மாவுடன் பிரத்யேகமாக உடையாடும் வாய்ப்பும் நமக்கு கிடைத்தது. அந்த உரையாடலில் இருந்து…

பெண்களுடன் ரேஷ்மா
பெண்களுடன் ரேஷ்மா

பிரபலமாக மாறியதால் சாமானிய குடும்ப பெண்ணின் வாழ்க்கையை மிஸ் செய்கிறீர்களா?

நான் வாழ்க்கையில எதையுமே மிஸ் பண்ணது கிடையாதுப்பா..வீட்ல சாதரணமான பொண்ணா இருந்திருந்தா கூட, எந்த வேலையும் செஞ்சிருக்க மாட்டேன். அதுக்காக எனக்கு சமையல் பிடிக்காதுன்னு அர்த்தம் கிடையாது. எனக்கு வேர்வை பிடிக்காது. அவ்வளவு வேர்வை, இரத்தம் சிந்தியெல்லாம் என்னால அந்த வேலையை செய்ய முடியாது. ஆனா, ஜிம்ல வேர்வை சிந்திதான் ஆகணும். அப்பதான் பாக்குறதுக்கு கொஞ்சமாவது சுமாரா இருப்போம். அதனால அங்க நோ காம்பரமைஸ்.

ரேஷ்மா பேட்டி
ரேஷ்மா பேட்டி

ராதிகா கேரக்டர் உங்கள ரொம்ப பிரபலமாக்கிடுச்சே?

ராதிகா கேரக்டர்ல நடிக்கிறதுக்கு முன்னாடியே நான் ஃபேமஸ்தான் கண்ணா.. ராதிகா கேரக்டர்டல நான் நடிச்சதால அந்தக்கேரக்டர் இன்னும் ஃபேமஸ் ஆகிடுச்சு. சோ, எல்லா கேரக்டருக்கும் நான்தான் லைஃப் கொடுத்துருக்கேன்.

சாமுண்டீஸ்வரி கேரக்டர் பாசிட்டிவ், நெகட்டிவ் இரண்டும் கலந்த மாதிரியான கேரக்டர்.. இந்த அனுபவம் எப்படி இருக்கு?

சாமுண்டீஸ்வரி நல்லவங்களுக்கு நல்லவ.. கெட்டவங்களுக்கு கெட்டவ.. உண்மையில அது நல்ல கேரக்டர். அந்த கேரக்டர் பெண்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் பண்ணும். இந்த மாதிரியான கேரக்டர எனக்கு கொடுத்த ஜீ தமிழுக்குதான் இந்த இடத்துல நான் நன்றி சொல்லணும்.

ரேஷ்மாவுக்கு ட்ரீம் கேரக்டர்னு ஏதாவது இருக்கா?

நிறைய கேரக்டர்கள் இருக்கு.. நடிகையாக நிறைய கேரக்டர்கள்ல நடிக்கத்தானே இங்க வந்துருக்கோம். ஆனா, வாய்ப்புகள்தான் கிடைக்க மாட்டுக்குது. கிடைச்சா நல்லா இருக்கும்.

வெள்ளித்திரையில எல்லோருக்கும் நடிக்கணும்னு ஆசைதான். ஆனா, ஒரு கேரக்டர்ல நடிச்சா, அதே மாதிரியான கேரக்டர்கள்லயே நடிக்க கூப்ட்றாங்க.. அத ஒப்பிடும் போது சின்னத்திரையில வித வித ரொல்கள்ல நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அதனால, நான் சின்னத்திரைக்கு நன்றிக்கடன் பட்டுருக்கேன்.

இந்த சமூகம் உங்கள ஒரு விதமாக எடை போட்டு வச்சிருக்கு?.. ஆனா, நீங்க இந்த சமூகத்துக்கிட்ட இருந்து என்ன எதிர்பாக்குறீங்க?

உண்மையில நான் ஒன்னுமே எதிர்பார்க்கல.. என்ன நிம்மதியா வாழவிடுங்க அது போதும். நான், நான் உண்டு என் லைஃப் உண்டுன்னு வாழ்ந்துட்டு இருக்கேன். நான் யார்கிட்டயும் எதையும் எதிர்பாக்குறது கிடையாது.

புஷ்பா ரோலுக்கு அப்புறமா பெருசா உங்கள வெள்ளித்திரையில பாக்க முடியலையே?

அப்படியெல்லாம் இல்ல.. எனக்கு பிடிச்ச, செளகரியம் கொடுக்குற ரோல்ல மட்டும் நடிச்சிட்டு இருக்கேன்.

நெகட்டிவ் கமெண்டுகள அசால்ட்டா ஹேண்டில் பண்றீங்களே?

எந்த ஒரு நெகட்டிவான விஷயத்தையும் நம்மள பாதிக்க வைக்க விட கூடாது; அதுக்கு நம்ம எனர்ஜி கொடுக்க, கொடுக்க அது உங்க வாழ்கையில முக்கியமான விஷயமா மாறிக்கிட்டே இருக்கும். அதுக்கு இடம் கொடுக்கக்கூடாது.

நமக்கு எது தேவையோ, அதுக்கு மட்டும் எனர்ஜி கொடுத்தாதான் நாம நிம்மதியா இருக்க முடியும். என்ன சுத்தி இருக்குற மக்கள் எனக்கு எப்போதுமே சப்போர்ட்டிவா இருக்காங்க..அவங்கள தவிர வெளிய இருக்குறவங்க என்ன பத்தி என்ன பேசுறாங்க அப்படிங்கிறது எனக்குத் தேவையில்லாத ஒன்னு

உடற்பயிற்சி உங்க லைஃப்ல எவ்வளவு முக்கியம்னு நினைக்கிறீங்க?

தோலுக்கும், உடம்புக்கும் ரொம்ப அக்கறை எடுத்துக்குறேன். இப்ப தியானத்தையும் ஆரம்பிச்சிருக்கேன். அது பெரிய கோலா இருக்கு... நிம்மதியா வாழணும்.. அவ்வளவுதான்’ என்று பேசி விடைபெற்றார்.