ஆர்த்தியுடனான விவாகரத்து.. கல்யாணத்திற்கு ஜோடியாக வந்த ஜெயம் ரவி கெனிஷா.. - சலசலப்பில் கோலிவுட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஆர்த்தியுடனான விவாகரத்து.. கல்யாணத்திற்கு ஜோடியாக வந்த ஜெயம் ரவி கெனிஷா.. - சலசலப்பில் கோலிவுட்!

ஆர்த்தியுடனான விவாகரத்து.. கல்யாணத்திற்கு ஜோடியாக வந்த ஜெயம் ரவி கெனிஷா.. - சலசலப்பில் கோலிவுட்!

Kalyani Pandiyan S HT Tamil
Published May 09, 2025 10:13 AM IST

ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஜெயம் ரவி. முன்னணி நடிகர்களின் பட்டியலில் இருக்கும் இவர், கடந்த வருடம் தன் மனைவி ஆர்த்தியை பிரிய இருப்பதாக கூறி அறிக்கை வெளியிட்டார்.

ஆர்த்தியுடனான விவாகரத்து.. கல்யாணத்திற்கு ஜோடியாக வந்த ஜெயம் ரவி கெனிஷா.. - சலசலப்பில் கோலிவுட்!
ஆர்த்தியுடனான விவாகரத்து.. கல்யாணத்திற்கு ஜோடியாக வந்த ஜெயம் ரவி கெனிஷா.. - சலசலப்பில் கோலிவுட்!

ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஜெயம் ரவி. முன்னணி நடிகர்களின் பட்டியலில் இருக்கும் இவர், கடந்த வருடம் தன் மனைவி ஆர்த்தியை பிரிய இருப்பதாக கூறி அறிக்கை வெளியிட்டார்.

ஜெயம் ரவியின் திரைப்பட தொடர்பான தேர்வு பணிகளில் ஆர்த்தி அம்மாவின் அதீத தலையீடு, அது தொடர்பான ஆர்த்தியின் நடவடிக்கைகள் உள்ளிட்ட்வைதான் இந்தப்பிரிவிற்கு காரணம் என்று ஒரு தரப்பிலும், இன்னொரு தரப்பில் ஜெயம் ரவியின் தோழி கெனிஷா பிரான்சிஸ் ரவியின் வாழ்க்கைக்குள் நுழைந்ததே பிரிவிற்கு காரணம் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ரவி கெனிஷா தனது நண்பர் என்றும் இருவரும் இணைந்து ஹீலிங் சென்டர் ஆரபிக்கப்போகிறோம் என்று கூறினார். ஆர்த்திக்கும், ரவிக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இப்படியான காலக்கட்டத்தில் தனது தோழியுடன் ரவி திருமணத்திற்கு வந்தது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னதாக ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கை!

அதில் அவர் “ என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்று அவர் எடுத்த இந்த முடிவு, முழுக்க முழுக்க ரவியின் சொந்த விருப்பத்தைச் சார்ந்து, அவராகவே எடுத்த முடிவே தவிர, குடும்ப நலன் எடுக்கப்பட்ட முடிவு அல்ல

ஆழ்ந்த மன வேதனை

ஆழ்ந்த மன வேதனையில் இருக்கின்ற நிலையிலும் நான் பொதுவெளியில் இது குறித்து கருத்து தெரிவிப்பதை இப்போதும் தவிர்க்கவே விரும்புகிறேன். ஆனால் என் மீது குற்றம் சாட்டியும், என் நடத்தையின் மீது களம் கற்பிக்கும் வகையிலும், பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஒரு தாயாக எனக்கு எப்பொழுதும் குழந்தைகளின் நலனும், எதிர்காலமுமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழநதைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது. இந்த கடினமான காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை, எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.’ இவ்வாறு ஆர்த்தி பதிவிட்டு இருந்தார்.