Rashmika Mandanna: ‘அவங்க மட்டும் இல்லன்னா நான் இப்படி இருக்கவே.. ஒரு நொடியில எல்லாமே போயிடும்ங்க’ - ராஷ்மிகா
Rashmika Mandanna: நாம் அனுபவிக்கும் இந்த ஆடம்பரம், நாம் ஆசைப்பட்டு வைத்திருக்கும் விஷயங்கள் அனைத்தும் இருக்கலாம் அல்லது ஒரு நொடியில் காணாமல் போகலாம். இந்த எண்ணம்தான் என்னை பணிவாகவும், என்னுடைய அடிப்படை என்னவோ அதனுடன் ஒன்றிணைத்தும்வைத்திருக்கிறது. - ராஷ்மிகா மந்தனா

பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா தான் இவ்வளவு பெரிய அந்தஸ்தை பெற்றிருந்த போதும், பணிவாக இருக்க வேண்டிய அவசியம் குறித்து பேசி இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, கடந்த 9 வருடங்களில் ‘கீதா கோவிந்தம்’, ‘ சீதா ராமம்’, ‘அனிமல்’, ‘புஷ்பா’, ‘புஷ்பா 2’ உள்ளிட்ட படங்களின் வெற்றியின் வழியாக மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்று இருக்கிறார். இவர் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் தான் ஏன் பணிவாக இருக்க வேண்டும் என்பது குறித்து பேசி இருக்கிறார்.
என்னுடைய இலக்கு
அதில் அவர், ‘ என்னுடைய இலக்கு பெரிய ஸ்டாராக மாறுவதை தாண்டி, மக்கள் முகத்தில் சிரிப்பை வரவழைப்பதே அதிர்ஷ்டவசமாக, நான் அதற்காக தனியாக மெனக்கெட வேண்டிய அவசியம் கிடையாது. காரணம், என்னுடைய மூளை ஏற்கனவே அந்த பாதையில்தான் பயணித்துக்கொண்டிருக்கிறது.
