Rashmika Mandanna: என்னை கவர்ந்த ஆண்.. சிறந்த பார்ட்னர்.. ரிலேஷன்ஷிப்பை உறுதிப்படுத்திய ராஷ்மிகா
Actress Rashmika Mandanna: என்னை கவர்ந்த ஆணின் சிறந்த பார்ட்னராக உள்ளேன் என தனது ரிலேஷன்ஷிப் குறித்து உறுதிபடுத்தியுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா.

நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது காலில் காயமடைந்த நிலையில் படப்பிடிப்புகளில் இருந்து குட்டி பிரேக் எடுத்தார். தன்னால் முழுமையாக நடக்க முடியாதபோதிலும் காலில் காயத்துடன் கட்டு போட்டுக்கொண்டு வீல் சேரில் தனது புதிய படமா சாவா புரொமோஷனில் கலந்து கொண்டார். ராஷ்மிகாவின் இந்த அர்பணிப்பை ரசிகர்களை மட்டுமன்றி திரையுலகினரும் வியந்து பாராட்டினர்.
இதையடுத்து தனக்கு, தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு இடையிலான ரிலேஷன்ஷிப்பை உறுதிபடுத்தியுள்ளார் நடிகை ராஷ்மிகா. பிரபல ஊடகமான ஹாலிவுட் ரிப்போர்டருக்கு பேட்டியளித்தார் நடிகை ராஷ்மிகா. அப்போது, ஒரு ஆணிடம் தான் விரும்பு குணாதிசயங்கள் பற்றி பேசிய அவர், அப்படியொரு நபருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் கூறியுள்ளார். அந்த ஆண் விஜய் தேவரகொண்டா தான் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார்.
ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன்
இதுகுறித்து நடிகை கூறியதாவது, "எனக்கு மகிழ்ச்சியான இடம் என்றால் எப்போதுமே என் வீடு தான். அங்கு நான் நங்கூரமிட்டு இருப்பதாக உணர வைக்கிறது. வேரூன்றி இருப்பதை உணர வைக்கிறது.