டைட்டில் வின்னருக்கு கூட இவ்வளவு சம்பளம் கிடையாதாம்.. பிக்பாஸ் வீட்டில் அதிக சம்பளம் வாங்கிய ரஞ்சித்.. விவரம் இதோ!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ரஞ்சித் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் அதிக சம்பளம் வாங்கிய போட்டியாளராக ரஞ்சித் உள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகம் தேவை இல்லை. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி ஆரம்பம் ஆனதில் இருந்தே, போட்டியாளர்கள் போட்டியை சுவாரசியமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதை காட்டமாக பேசி, வாரம் வாரம் ட்ரில் எடுத்து வரும் அவரின் தொகுத்து வழங்கும் பாங்கு அனைவரையும் கவர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் புதிது, புதிதாக டாஸ்க்குகளை பிக்பாஸும் கொடுத்து நிகழ்ச்சியை சுவார்சியமாக்க முயற்சி செய்து வருகிறார். அதனால் நிகழ்ச்சி விமர்சனத்திற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.
டிஆர்பி ரேட்டிங்கில் சரிவு
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது 12 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இன்னும் ஒரு மாதத்தில் நிகழ்ச்சி நிறைவடையவுள்ளதால் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த 7 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை கண்டுள்ளது.
இன்னும் ஒரு மாதத்தில் நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ள நிலையில் தீபக், முத்துக்குமரன், விஜே விஷால், அருண் பிரசாத், ஜெஃப்ரி, , ராணவ், ரயான், சௌந்தர்யா, ஜாக்குலின், அன்ஷிதா, பவித்ரா, மஞ்சரி ஆகிய 12 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.
வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்
முன்னதாக, ரவீந்தர் சந்திரசேகர், தர்ஷா குப்தா, சுனிதா, அர்னவ், ரியா,வர்ஷினி வெங்கட், மற்றும் சிவகுமார், ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகாவும், சத்யாவும் ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில், கடந்த வாரம் ரஞ்சித் வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ரஞ்சித் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் அதிக சம்பளம் வாங்கிய போட்டியாளரான ரஞ்சித்திற்கு ஒரு நாளைக்கு ரூ.50 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது. இவர் மொத்தமாக இருந்த 77 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 38 லட்சத்து 50 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு 50 லட்சம் பரித்தொகை வழங்கப்படும், ஆனால் அதில் வரி போக அவர்களுக்கு 30 லட்சம் தான் கிடைக்குமாம். அப்படி பார்த்தால் இவருக்கு டைட்டில் வின்னரை விட அதிக சம்பளம்.
75 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர். அதிகபட்சமாக இன்னும் நான்கு வாரங்களில் இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக இன்னும் சில டபுள் எவிக்ஷன் நடக்கவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்