என் பையன் சிரமப்படுவதை பார்க்கமுடியல.. ராணவ்வை வீட்டிற்கு அனுப்புங்க.. பிக்பாஸிடம் ராணவ் பெற்றோர் கோரிக்கை!
தோள்பட்டையில் அடிபட்டு வலியால் துடித்த ராணவ்வை பிக்பாஸ் வீட்டிலிருந்து அனுப்பிவைக்குமாறு அவரின் பெற்றோர் விஜய் தொலைக்காட்சிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் கோரிக்கை வைத்ததாகத் தகவல் பரவிவருகிறது.
பிக்பாஸ் வீட்டின் 72வது நாளான நேற்று போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் கொடுத்த டாஸ்கை விளையாடி வந்தனர். அப்போது, ஜெஃப்ரி ராணவ்வை கீழே தள்ளி அழுத்தியுள்ளார். இதில், ராணவ்விற்கு தோள்பட்டையில் அடிபட்டு வலியால் துடித்துள்ளார். இருப்பினும், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களான அன்ஷிதா, சௌந்தர்யா, ஜெஃப்ரி போன்றோர் விளையாட்டில் ராணவ் தனியாக தெரியவேண்டும் என்பதற்காக நடித்து வருகிறார் என கூறிவந்தனர்.
இருப்பினும் ராணவ் தொடர்ந்து வலியால் துடித்து வந்ததை கவனித்த அருண் அவரை பிக்பாஸிடம் அழைத்துச் சென்றார். அந்த சமயத்திலும், அன்ஷிதா போட்டியை திசைத்திருப்ப ராணவ் நடிப்பதாகவும், வலது பக்கம் திரும்பி விழுந்த ராணவ்விற்கு எப்படி இடது பக்கம் வலி வரும் என ஜெஃப்ரியும் கூறி வந்தனர்.
கையில் கட்டோடு ராணவ்
அந்த சமயத்தில் பேசிய பிக்பாஸ், ராணவ் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். பின் கையில் கட்டோடு பிக்பாஸ் வீட்டிற்குள் திரும்பி வந்த ராணவ்விடம் அன்ஷிதா மன்னிப்பு கேட்டார். ஆனால், சௌந்தர்யா ராணவ் மீது தான் தவறு என்பதை கூறி அவரிடம் சண்டைக்கு நின்றார். இதற்கிடையில், பிக்பாஸ் ஆக்டிவிட்டி டாஸ்க்கில் இருந்து ராணவ்விற்கு 3 வாரம் ஓய்வு அளித்து அறிவித்துள்ளார்.
தங்கள் மகன் சிரமப்படுவதைப் பார்க்கமுடியவில்லை
இதனிடையே ராணவ்வை பிக் பாஸ் வீட்டிலிருந்து அனுப்பிவைக்குமாறு அவரின் பெற்றோர் விஜய் தொலைக்காட்சிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் கோரிக்கை வைத்ததாகத் தகவல் பரவிவருகிறது. பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களிடையே உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தங்கள் மகன் சிரமப்படுவதைப் பார்க்கமுடியவில்லை என்றும், இதனால் தங்கள் மகனை வீட்டிற்கு அனுப்புமாறும் கோரிக்கைவைத்துள்ளனர்.
எனினும் பெற்றோருக்கு விளக்கமளித்துள்ள பிக்பாஸ், தங்கள் மகன் தனது இலக்கை அடையும் பயணத்தின் ஒரு பகுதியாக இங்கு வந்துள்ளதாகவும், அனைத்துயும் கடந்து அவர் விளையாடிவருவதாகவும் ஆறுதல் கூறியுள்ளனர்.
முன்னதாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோள் பட்டை வலியால் துடித்த நிலையில், அவரது பெற்றோர், ராணவ்வை நிகழ்ச்சியில் இருந்து வீட்டிற்கு அனுப்பி விடுமாறும், தங்கள் பிள்ளை வலியால் துடிப்பதை தங்களால் காண முடியவில்லை என்றும் பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகம் தேவை இல்லை. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி ஆரம்பம் ஆனதில் இருந்தே, போட்டியாளர்கள் போட்டியை சுவாரசியமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதை காட்டமாக பேசி, வாரம் வாரம் ட்ரில் எடுத்து வரும் அவரின் தொகுத்து வழங்கும் பாங்கு அனைவரையும் கவர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் புதிது, புதிதாக டாஸ்க்குகளை பிக்பாஸும் கொடுத்து நிகழ்ச்சியை சுவார்சியமாக்க முயற்சி செய்து வருகிறார். அதனால் நிகழ்ச்சி விமர்சனத்திற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.
முன்னதாக, ரவீந்தர் சந்திரசேகர், தர்ஷா குப்தா, சுனிதா, அர்னவ், ரியா,வர்ஷினி வெங்கட், மற்றும் சிவகுமார், ஆனந்தி, சாச்சனா ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில், கடந்த வாரம் தர்ஷிகாவும், சத்யாவும் வெளியேற்றப்பட்டனர். தற்போது வீட்டிற்குள் பவித்ரா ஜனனி, ராயன், ஜாக்குலின், ரானவ், ரஞ்சித், முத்துக்குமரன், , மஞ்சரி நாராயணன், , சௌந்தரியா நஞ்சுதன், ஜெஃப்ரி ஆகியோர் உள்ளனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்