Rana Daggubati: மோசமான விமான அனுபவம்…. கொதிக்கும் ராணா
நடிகர் ராணா இண்டிகோ விமான சேவையின் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
நடிகர், நடிகைகளுக்கு விமான நிலையம், விமானத்தில் பிரச்னை ஏற்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. அதே போன்று ஒரு சிரமத்தை நடிகர் ராணா சந்தித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இது குறித்து ராணா டகுபதி சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், '' இந்தியாவின் மோசமான விமான அனுபவம் Indigo 6 E கொடுத்தது. விமானத்தில் காணாமல் போன எனது உடைமைகள் அடங்கிய லக்கேஜ் இன்னும் என் கைக்கு வந்து சேரவில்லை.
அதிகாரிகளிடம் கேட்டால் எங்களுக்கு தெரியாது என்று பதில் சொல்கிறார்கள். இந்த விஷயம் சக பயணிகளுக்கு தெரியும். ஆனால் அதிகாரிகள் தெரியாது என்கின்றனர். இதை விட கேவலம் இருக்குமா?" என கேட்டுள்ளார்.
நடிகர் ராணா ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் பெங்களூருக்குச் செல்லும் போது இந்த சோதனையை எதிர்கொள்ள நேர்ந்தது.
ராணா மற்றும் அவரது குடும்பத்தினர் செக்-இன் செய்த பிறகு, சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் தாமதமாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டு, வேறு விமானத்தில் ஏறச் சொன்னார்கள்.
அதே விமானத்தில் அவரது லக்கேஜ் அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டது. இருப்பினும், பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு அவரது தனது பொருட்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
நடிகர் ராணா ட்வீட்டுக்கு இண்டிகோ பதிலளித்துள்ளது, "எங்களால் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தயவு செய்து கவலைப்பட வேண்டாம், உங்கள் லக்கேஜ்களை விரைவில் டெலிவரி செய்ய எங்கள் குழு உழைக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.
டாபிக்ஸ்