Rajkiran Zeenat Priya: குடிபோதையில் கொடூர அடிகள்; பணம் வாங்கி வரச்சொல்லி படுத்திய பாடு; கதறும் ராஜ்கிரண் மகள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajkiran Zeenat Priya: குடிபோதையில் கொடூர அடிகள்; பணம் வாங்கி வரச்சொல்லி படுத்திய பாடு; கதறும் ராஜ்கிரண் மகள்!

Rajkiran Zeenat Priya: குடிபோதையில் கொடூர அடிகள்; பணம் வாங்கி வரச்சொல்லி படுத்திய பாடு; கதறும் ராஜ்கிரண் மகள்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Feb 05, 2024 05:30 AM IST

அவரிடம் மன்னிப்பு கேட்கும் வகையில்தான் அண்மையில் வீடியோ வெளியிட்டேன். உண்மையில் கல்யாணத்திற்கு பிறகு, எனக்கு ஒரு பெரிய பிரச்சினை ஒன்று வந்தது.

பிரியா பேட்டி!
பிரியா பேட்டி!

இது குறித்து அவர் பேசும் போது, “நான் முனீஸ்ராஜாவை திருமணம் செய்து கொண்டு, என்னுடைய அப்பாவை எந்த அளவு வருத்தப்படச் செய்தேன் என்பது தமிழ்நாட்டிற்கே தெரியும். 

அவரிடம் மன்னிப்பு கேட்கும் வகையில்தான் அண்மையில் வீடியோ வெளியிட்டேன். உண்மையில் கல்யாணத்திற்கு பிறகு, எனக்கு ஒரு பெரிய பிரச்சினை ஒன்று வந்தது. அந்த பிரச்சினையின் போது ராஜ்கிரண் அப்பா, மருத்துவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் எனக்கு உடன் நின்று உதவி செய்தார்.

முனீஸ்ராஜா உண்மையில் அவர் ஒரு குடிகாரர். தினமும் குடித்துவிட்டு என்னை அடிப்பார். வேறு மாதிரி நடந்து கொள்வார். ஆனால் காலையில் எழுந்ததும் எதுமே நடக்காதது போல பேசுவார். அதையெல்லாம் பார்த்து பொறுமையாக இருந்த நான், கொஞ்சம் கொஞ்சமாக அவரை திருத்தி வெளியே கொண்டு வந்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அது முடியவில்லை. 

அதனை தொடர்ந்து எனக்குத் தெரிந்தவர்களிடம் சென்று பணம் வாங்கி வரச் சொல்லி வற்புறுத்தினார். இதனால் அவர்களையும் பணம் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டிய நிலை உருவானது. 

இந்த பிரச்சினையானது தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. இதனால் எங்களுக்குள் வாக்கு வாதம் தொடர்ந்தது. இதனையடுத்து என்னை நான் காப்பாற்றிக் கொள்வதற்காக, அந்த உறவிலிருந்து வெளியே வர முடிவெடுத்தேன். 

ஆனால் அவரோ, தன்னை விட்டுச் சென்றால் என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் வெட்டிவிடுவேன் என்றும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் மனைவி எனக்கு உறுதுணையாக இருப்பதை தெரிந்து கொண்டு, அவரின் பெயரையும் சமூகத்தில் கேவலப்படுத்துவேன் என்றும் மிரட்டினார் 

ஒரு நாள் திடீரென்று வந்து, தாரணி என்ற பெண்ணை ஏற்கனவே தான் திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்தான் அவருக்கு சட்டப்படி மனைவி என்றும் கூறினார். ஒருகட்டத்தில் என்னால் அடி தாங்க முடியவில்லை. அதனால் என்ன ஆனாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று அவரை விட்டு வெளியே வந்து விட்டேன்.” என்று பேசினார்.