ரெட்ரோ படத்தை ரஜினி பார்த்தார்.. என்ன சொன்னார் தெரியுமா? - எக்ஸ் தளத்தில் துள்ளி குதிக்கும் கார்த்திக் சுப்புராஜ்!
ரெட்ரோ திரைப்படத்தை தலைவர் ரஜினிகாந்த் பார்த்து விட்டார். அவருக்கு படம் பிடித்திருந்தது. - கார்த்திக் சுப்புராஜ் எக்ஸ் பதிவு!

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த மே 1 அன்று வெளியான திரைப்படம் ரெட்ரோ. இந்தத் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ரெட்ரோ திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்திருக்கிறார். அதனை தொடர்ந்து படம் குறித்தான தனது கருத்துக்களை இயக்குநர் கார்த்திக்கிடம் பகிர்ந்து இருக்கிறார்.
இதனை அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்தப்பதிவில், ‘ரெட்ரோ திரைப்படத்தை தலைவர் ரஜினிகாந்த் பார்த்து விட்டார். அவருக்கு படம் பிடித்திருந்தது. அவர் என்ன சொன்னார் என்றால், படக்குழு என்னா மாதிரியான உழைப்பை கொடுத்திருக்கிறது. சூர்யாவின் நடிப்பு சூப்பர். குறிப்பாக படத்தின் இறுதி 40 நிமிடங்கள் சூப்பர்.
படத்தில் இடம் பெற்ற சிரிப்பு தொடர்பான விஷயம் நன்றாக இருந்தது என்றார். அவரின் இந்த வாழ்த்தால் நான் பறந்து கொண்டிருக்கிறேன். லவ் யூ தலைவா’ என்று பதிவிட்டு இருக்கிறார். ஜானி படத்தில் இடம் பெற்ற ரஜினியின் தோற்றத்தை ரெட்ரோ படத்தில் கார்த்திக் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பூஜா ஹெக்டே, ஜோஜூ, ஜெயராம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்தன. இன்னும் சிலர் படத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். ஆன்லைனிலும் பலர் படத்தை கிண்டல் செய்து கமெண்டுகளையும், வீடியோக்களையும் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த விமர்சனங்கள் குறித்து கார்த்திக் சுப்புராஜ் அண்மையில் சினி உலகம் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
அந்தப்பேட்டியில் அவர் பேசும் போது, ‘நான் எந்த விமர்சனத்தையும் பார்க்கவில்லை. காரணம், அதில் பெரும்பான்மையான விமர்சனங்களில் நம்பகத்தன்மை இல்லை. அதனால், நான் அதனை பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
சூர்யாவுடன் மறுபடியும்
அத்துடன், சூர்யா ஒரு பேட்டியில் உங்களின் மற்றொரு ஸ்கிரிப்டடும் அவருக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், அதில் நடிக்க விரும்புவதாகவும் கூறியது குறித்து கேட்கும் போது, ‘ ஆமாம், உண்மையில் அதில் நடிப்பதற்கு அவர் மிகவும் உற்சாகமாக இருந்தார். ஆனால் அந்தப்படத்திற்கு பெரிய பட்ஜெட்டும், அதிக காலமும் வேண்டும்.
அந்த படத்தை நான் நிச்சயமாக சூர்யா சாருடன் செய்வேன். ஆனால் அவருக்கு தற்போது ஏராளமான கமிட்மெண்டுகள் இருக்கின்றன. அதனால் அதனை எப்போது தொடங்குவோம் என்பது தெரியாது. என்னுடைய எல்லா படங்களையும் போலவே இதுவும் என்னுடைய கனவுக் கதைதான்.’ என்று பேசினார்.

டாபிக்ஸ்