Rajinikanth Speech: ‘துரைமுருகனை காட்டி முதல்வரை எச்சரித்த ரஜினி!’ பதில் கவுண்டர் கொடுத்த ஸ்டாலின்! நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajinikanth Speech: ‘துரைமுருகனை காட்டி முதல்வரை எச்சரித்த ரஜினி!’ பதில் கவுண்டர் கொடுத்த ஸ்டாலின்! நடந்தது என்ன?

Rajinikanth Speech: ‘துரைமுருகனை காட்டி முதல்வரை எச்சரித்த ரஜினி!’ பதில் கவுண்டர் கொடுத்த ஸ்டாலின்! நடந்தது என்ன?

Kathiravan V HT Tamil
Published Aug 24, 2024 10:07 PM IST

Superstar Rajinikanth Speech: நடிகர் ரஜினி காந்திற்கு என்னைவிட ஒரு வயது கூடதான், அதனால் அறிவுரையும் சொன்னார். அவர் சொன்ன அத்தனையையும் நான் புரிந்துகொண்டேன். பயப்படவேண்டாம். எதிலும் நான் தவறிவிடமாட்டேன். எல்லாவற்றிலும் உஷாராக இருப்பேன் என்ற அந்த உறுதியை அவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Rajinikanth Speech: ‘துரைமுருகனை காட்டி முதல்வர் எச்சரித்த ரஜினிகாந்த்!’ கவுண்டர்  கொடுத்த ஸ்டாலின்! நடந்தது என்ன?
Rajinikanth Speech: ‘துரைமுருகனை காட்டி முதல்வர் எச்சரித்த ரஜினிகாந்த்!’ கவுண்டர் கொடுத்த ஸ்டாலின்! நடந்தது என்ன?

கலைஞரின் கவிதையை படிக்கவில்லை

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், இந்த விழாவுக்கு என்ன பேச வேண்டும் என்று சொல்வதை விட, என்ன பேசக் கூடாது என்பதை லிஸ்ட் போட்டு எடுத்து வந்து உள்ளேன். இந்த நிகழ்ச்சியில் அரசியல் ஏதும் இல்லை என்று என்னிடம் அமைச்சர் எ.வ.வேலு கூறினார். 

கலைஞரை பொறுத்தவரை சினிமா, இலக்கியம், அரசியல் என்று மூன்றுதான். அவருடைய சினிமா குறித்து நான் நிறைய முறை பேசிவிட்டேன். அவரது இலக்கியம் குறித்து எனக்கு அவ்வளவாக தெரியாது. அவரது கதைகள், கவிதைகளை நான் படித்தது இல்லை. 

எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்று உள்ளார்

அடுத்து உள்ளது அரசியல்தான், அதை பற்றி நான் பேச வேண்டும் எனில் ரொம்ப ஜாக்ரதையாக பேச வேண்டும். மதிப்புக்குரிய நண்பர் ஸ்டாலின் சார் அவர்கள் முதலமைச்சர் ஆன பிறகு அவர் சந்தித்த எல்லா தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றியை அடைந்து உள்ளார். அவருடைய ஆளுமை, உழைப்பு, அரசியல் ஞானத்தை இந்த நேரத்தில் குறிப்பிட்டே ஆக வேண்டும். 

ஒரு கட்சி நிர்வாகத்தை பொறுத்தவரை அதன் தலைவர் மறைந்த பிறகு அதன் பிறகு வரும் அவரது சந்ததிகள் அதனை கட்டிக்காப்பதற்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள். பலர் அதில் தோல்வி அடைந்து உள்ளனர். ஆனால் சர்வ சாதாரணமாக இதை அவர் செய்து வருகிறார். 

துரைமுருகனை சமாளிப்பது சாதாரணம் இல்லை 

பள்ளி ஆசியர்களுக்கு புதிய மாணவர்கள் பிரச்னையே கிடையாது சமாளித்துவிடுவார்கள். ஆனால் பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயம் இல்லை. இங்கே ஏகபட்ட பழைய மாணவர்கள் உள்ளார்கள். அதுவும் அவர்கள் சாதாரணமாணவர்கள் இல்லை; அசாத்யமானவர்கள். அவர்கள் அனைவரும் ரேங்க் வாங்கிவிட்டு கிளாஸைவிட்டு செல்லமாட்டோம் என உட்கார்ந்து கொண்டு உள்ளனர். 

அவர்களை எல்லாம் சமாளிப்பது சாதாரணம் இல்லை. இங்கு துரைமுருகன் என்று ஒருவர் உள்ளார். கலைஞர் கண்ணிலேயே விரல்விட்டு ஆட்டியவர் அவர். அவரிடம் ”ஒரு விஷயத்தை செய்கிறோம் அண்ணே!” என்று கூறினார். அவர் ‘அப்டியா! சந்தோஷம்’ என்று சொல்லுவர். 

ஆனால் அவர் நன்றாக உள்ளது என்பதற்காக சந்தோஷம் என்று சொல்கிறாரா? அல்லது என்னடா இப்டி பன்றீங்கண்ணு சந்தோஷம்னு சொல்கிறாரா? என்பது புரியாது.  ஸ்டாலின் சார் ’ஆட்ஸ் ஆஃப் டூ யூ’

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கைகளால் வாங்குவதில் நான் பெருமை அடைகிறேன். இந்த விழாவின் உண்மையான நாயகராக எ.வ.வேலு உள்ளார். 

திருவண்ணாமலையில் லால்சலாம் படப்பிடிப்புக்காக மூன்று முறை நான் சென்று இருந்தேன். அங்கு சென்ற போது எ.வ.வேலு அவர்களின் கல்லூரி விருந்தினர் மாளிகையில், கலைஞர் அவர்கள் தங்குவதற்காக அறை ஒன்றை கட்டி உள்ளனர். நமது முதலமைச்சர் செல்லும்போது கூட அங்கேதான் தங்குவார். அந்த அறையத்தான் எனக்கு தந்தார்கள் என நடிகர் ரஜினிகாந்த் பேசினார். 

நான் உஷாராகவே இருப்பேன்! - ரஜினிக்கு முதலமைச்சர் பதில்  

பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பு வைத்தது போல நம்முடைய சூப்பர் ஸ்டார் வருகை தந்து மனந்திறந்து என்னை ஊக்கப்படுத்தக்கூடிய வகையில், என்னைவிட ஒரு வயது கூடதான், அதனால் அறிவுரையும் சொன்னார். அவர் சொன்ன அத்தனையையும் நான் புரிந்துகொண்டேன். பயப்படவேண்டாம். எதிலும் நான் தவறிவிடமாட்டேன். எல்லாவற்றிலும் உஷாராக இருப்பேன் என்ற அந்த உறுதியை அவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.