Rajinikanth Speech: ‘துரைமுருகனை காட்டி முதல்வரை எச்சரித்த ரஜினி!’ பதில் கவுண்டர் கொடுத்த ஸ்டாலின்! நடந்தது என்ன?
Superstar Rajinikanth Speech: நடிகர் ரஜினி காந்திற்கு என்னைவிட ஒரு வயது கூடதான், அதனால் அறிவுரையும் சொன்னார். அவர் சொன்ன அத்தனையையும் நான் புரிந்துகொண்டேன். பயப்படவேண்டாம். எதிலும் நான் தவறிவிடமாட்டேன். எல்லாவற்றிலும் உஷாராக இருப்பேன் என்ற அந்த உறுதியை அவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Rajinikanth Speech: ‘துரைமுருகனை காட்டி முதல்வர் எச்சரித்த ரஜினிகாந்த்!’ கவுண்டர் கொடுத்த ஸ்டாலின்! நடந்தது என்ன?
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ என்ற நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.
கலைஞரின் கவிதையை படிக்கவில்லை
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், இந்த விழாவுக்கு என்ன பேச வேண்டும் என்று சொல்வதை விட, என்ன பேசக் கூடாது என்பதை லிஸ்ட் போட்டு எடுத்து வந்து உள்ளேன். இந்த நிகழ்ச்சியில் அரசியல் ஏதும் இல்லை என்று என்னிடம் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
கலைஞரை பொறுத்தவரை சினிமா, இலக்கியம், அரசியல் என்று மூன்றுதான். அவருடைய சினிமா குறித்து நான் நிறைய முறை பேசிவிட்டேன். அவரது இலக்கியம் குறித்து எனக்கு அவ்வளவாக தெரியாது. அவரது கதைகள், கவிதைகளை நான் படித்தது இல்லை.