ரஜினியின் பர்த்டே ட்ரீட்.. சாய்பல்லவி வார்னிங்.. பிரபல இயக்குநர் விவாகரத்து! தமிழ் டாப் சினிமா செய்திகள் இன்று
ரஜினியின் பர்த்டே ட்ரீட், சாய்பல்லவி வார்னிங், அரசாங்க ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன், பிரபல இயக்குநர் விவாகரத்து உள்பட தமிழ் டாப் சினிமா செய்திகள் இன்று எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 74வது பிறந்தநாளை முன்னிட்டும் அவர் தொடர்பான கிளாசிக் புகைப்படங்கள், விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் இன்று ட்ரெண்டாகின. தமிழில் சூது கவ்வும், ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ் ஆகிய படங்கள் நாளை வெளியாகி இருக்கின்றன. இதற்கிடையே டாப் சினிமா செய்திகள் இன்று எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
திருத்தணியில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்
நடிகர் சிவகார்த்திகேயன் திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்ற சிவகார்த்திகேயன், மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மலர் மாலை, விபூதி பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அப்போது அங்கு இருந்த பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் நடிகர் சிவகார்த்திகேயனுடன் புகைப்படம் எடுத்துக் மகிழ்ச்சி அடைந்தனர்.
ரஜினி பர்த்டே ட்ரீட்டாக வெளியான சிகிடு வைப் பாடல்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது 74வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கும் நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் கூலி படத்தில் இருந்து ரசிகர்களுக்கு பர்ட்டே ட்ரீட்டாக வைப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அனிருத் இசையில் டி. ராஜேந்தர் பாடியிருக்கும் இந்த பாடலுக்கு ரஜினியின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அத்துடன் பாடலை பலரும் வைப் செய்து வருகிறார்கள்.
வதந்த பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை என சாய்பல்லவி வார்னிங்
’ராமாயணா’ புராணக் கதையில் சீதையாக நடித்து வரும் சாய் பல்லவி, அந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை அசைவ உணவுகள் எதையும் தொடுவதில்லை என உறுதி எடுத்திருக்கிறார் எனவும், ஹோட்டலில் கூட சாப்பிடாமல், வெளியூர்களுக்குச் செல்லும் போது கையோடு சமையல்காரர்களை அழைத்து செல்கிறார். அவர்கள் சாய் பல்லவிக்கு சைவ உணவு சமைத்து கொடுக்கிறார்கள்” என செய்தி வெளியிட்டது.
இது குறித்து சாய்பல்லவி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் எப்போதும் வதந்திகளுக்கும் தவறான அறிக்கைகளையும் கண்டு கொள்வதில்லை. அது கடவுளுக்கு தெரியும். ஆனால் வதந்திகள் குறித்து பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. குறிப்பாக எனது படம் வெளியாகும் போதும், அறிவிப்பு வெளியாகும் போதும் இது போன்ற வந்ததிகள் பரப்பப்படுகிறது. அடுத்த முறை ஒரு நம்பிக்கைக்குரிய ஊடகம் அல்லது சமூக ஊடக பக்கங்கள், இது போன்ற தவறான செய்தி, வதந்தியை பரப்பினால் எனது சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.
பத்திரிகையாளரை தாக்கிய மோகன் பாபு மீது வழக்குப்பதிவு
நடிகர் மோகன் பாபுவின் சொத்துக்களை பிரிப்பது சம்பந்தமாக அவரது மகன்கள் விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு ஆகியோரிடையே தகராறு நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் மனோஜ் மஞ்சு தனது தந்தை வீட்டிற்கு சென்றபோது பிரச்னை ஏற்பட்டது. இதுபற்றி மோகன் பாபு வீட்டிக்கு சென்ற செய்தியாளர்கள் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த நடிகர் மோகன் பாபு செய்தியாளர்களின் மைக்கை பிடுங்கி தாக்குதல் நடத்தினார்.
இதில் செய்தியாளர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் நடிகர் மோகன் பாபு, அவரது மகன்கள் விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு ஆகியோர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். இந்த வழக்கில் மோகன் பாபு முன் ஜாமின் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது
லண்டன் இசைப்பள்ளியில் கெளரவ தலைவரானார் ஏ.ஆர். ரஹ்மான்
இந்திய சினிமாக்களில் மட்டுமல்லாமல், ஹாலிவுட் சினிமாக்களிலும் இசையமைத்து பிரபலமான இந்திய இசையமைப்பாளராக இருந்து வருகிறார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். இதையடுத்து லண்டனில் உள்ள டிரினிட்டி லாபான் இசைப்பள்ளியின் கௌரவத் தலைவராகஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த பதவியில் 5 ஆண்டுகாலத்துக்கு தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மனைவியை பிரிந்தார் இயக்குநர் சீனு ராமசாமி
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வரும் சீனு ராமசாமி, தனது மனைவியை பிரிவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், "அன்பானவர்களுக்கு வணக்கம் நானும் எனது மனைவி ஜி.எஸ். தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும், அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன். அவரும் அறிவார்.
இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம்.
இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம்.
அன்புடன்
சீனு ராமசாமி." என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டில் மனைவியை பிரியும் மற்றொரு சினிமா பிரபலமாக மாறியுள்ளார் சீனு ராமசாமி
ஹீரோயின் ஆனார் பிக்பாஸ் ஜனனி
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர், மாடலான ஜனனி. இவர் அருண் பிரசாத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அறிவான் படம் மூலம் ஹீரோயின் ஆகியுள்ளார். இந்த படத்தில் ஆனந்த் நாக்குக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி என்கவுண்டரால் வேறு ஊருக்கு மாற்றப்படுகிறார். அங்கு அடுத்தடுத்து 4 கொலைகள் நடக்கிறது. கொலைகளுக்கு பின்னால் இருப்பது யார்? என்ற துப்பறியும் கதையமைப்பில் படம் உருவாகியுள்ளது
அரசாங்க ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்
அரசாங்கத்துக்கு சொந்தமான ஹோட்டலை விலைக்கு கேட்டு ஷாக் கொடுத்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இது தொடர்பாக புதுச்சேரி சுற்றுலா துறை அமைச்சரிடம் உரையாடல் நடத்தியிருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்கு இடம் கேட்க, அரசுக்கு சொந்தமான ஹோட்டலை அவர் கேட்டதாக தெரியவந்துள்ளது.
இந்து முறைப்படி கீர்த்தி சுரேஷ் திருமணம்
காதலர் ஆண்டனி தட்டிலை மணம் முடித்த கீர்த்தி சுரேஷ் திருமதி ஆகியுள்ளார். கோவாவில் இந்து முறைப்படி நடந்த திருமணத்தில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். கீர்த்தியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது
பென்ஸ் படத்தில் வில்லன் நான் இல்லை
பென்ஸ் படத்தில் வில்லனா நடிக்க யாரும் என்னை அணுகவில்லை என நடிகர் மாதவன் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தில் மாதவன் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மாதவன் பகிர்ந்திருக்கும் பதிவில், "என்னை பற்றிய இந்த செய்தி பார்க்க ஆர்வமாக உள்ளது. நான் இந்த யூனிவெர்சஸில் அங்கம் வகிக்க விரும்புகிறேன். ஆனாலும் இந்த செய்தி எனக்கு ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது. இந்த செய்து பற்றி எந்த யூகமும் இல்லை" என சிரிப்பு எமோஜியுடன் பகிர்ந்துள்ளார்.
இதன் மூலம் அவர் எல்சியூ யுனிவெர்ஸிலும், பென்ஸ் படத்திலும் கமிட்டாகவில்லை என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.