Surya Vamsam:‘’சூரிய வம்ச கலெக்டர் போல ராதிகாவை எம்.பி. ஆக்குவேன் ‘’- சரத் குமார் பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Surya Vamsam:‘’சூரிய வம்ச கலெக்டர் போல ராதிகாவை எம்.பி. ஆக்குவேன் ‘’- சரத் குமார் பேட்டி

Surya Vamsam:‘’சூரிய வம்ச கலெக்டர் போல ராதிகாவை எம்.பி. ஆக்குவேன் ‘’- சரத் குமார் பேட்டி

Marimuthu M HT Tamil Published Mar 24, 2024 03:34 PM IST
Marimuthu M HT Tamil
Published Mar 24, 2024 03:34 PM IST

சூரிய வம்ச கலெக்டர் போல, என் மனைவி ராதிகாவை எம்.பி. ஆக்குவேன் என சரத் குமார் பேட்டியளித்துள்ளார்.

‘’சூரிய வம்ச கலெக்டர் போல ராதிகாவை எம்.பி. ஆக்குவேன் ‘’- சரத் குமார் பேட்டி
‘’சூரிய வம்ச கலெக்டர் போல ராதிகாவை எம்.பி. ஆக்குவேன் ‘’- சரத் குமார் பேட்டி

அப்போது திருப்பரங்குன்றம் முருகன் கோயில் முன்பு, ராதிகா சரத் குமார் மற்றும் சரத் குமார் ஆகிய இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், ‘’முதலில் வேலைசெய்பவர்களுக்கு வேலை வாய்ப்பு, அப்புறம் உணவு, அதன்பின் இருக்கும் இடம் அதை முன்னிலைப் படுத்திதான் நாங்கள் செயல்படுவோம். அது முதலில் வந்து சேர்வோம்.

பிரதமர் மோடிஜி அவர்கள் எத்தனையோ விஷயங்கள் நாட்டுக்கு செய்திருக்கிறார்கள். நிறைய விஷயங்கள் தமிழ்நாட்டுக்கு வந்துசேரவில்லை. அது வந்து சேர்வதற்கு நாங்கள் நிச்சயமாகப் பாடுபடுவோம்’’ என்றார், ராதிகா சரத்குமார்.

அதைத்தொடர்ந்து பேசிய சரத் குமார், ‘நான் போட்டியிட்டாலும் ஒன்று தான், எனது மனைவி போட்டியிட்டாலும் ஒன்று தான். அவருக்கு வாய்ப்பு கொடுத்திருப்பது, எனக்கு வாய்ப்பு கொடுத்த மாதிரி தான். மக்களுக்கு வாய்ப்பு கொடுத்த மாதிரிதான். நல்ல ஒரு பிரதிநிதி வேண்டும். 33 விழுக்காடு மகளிருக்கு உரிமை இருக்கும்போது, அதன்படி மகளிருக்கு வாய்ப்பு அளிப்பது நல்லது.

ஒவ்வொரு வெற்றியாளனுக்குப் பின்னும், ஒரு பெண் இருக்கும்போது, பிரதமர் மோடிஜி அதனை உறுதிப்படுத்தும் வகையில், வாய்ப்பு கொடுத்திருக்கிறார். சூர்ய வம்சத்தில் எப்படி நான் படிக்காதவனாக இருந்து என் மனைவியாக நடிக்கும் கதாபாத்திரத்தை கலெக்டர் ஆக்கினேனோ அதோபோல், என் வாழ்க்கைத்துணை ராதிகாவை கலெக்டர் ஆக்க முயற்சிப்பேன். உண்மையாக உழைப்போம். பல திட்டங்கள் இங்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது. 30 நாட்களாக விருதுநகரில் இருக்கும் பிரச்னை, தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்னை அனைத்தையும் படித்திருக்கிறார், ராதிகா. அவருக்கு விருதுநகரில் என்னமாதிரியான பிரச்னை இருக்கிறது என்பது நன்கு தெரியும்.

1956ஆம் ஆண்டு முதல் 1963 வரை சிறந்த அப்பழுக்கற்ற ஆட்சியைக் கொடுத்தவர், காமராஜரின் மண்ணில் எனது மனைவி போட்டியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. காமராஜரைப் போன்று ஒரு அப்பழுக்கற்ற ஆட்சியைப் புரிந்து வருகின்றார், பிரதமர் மோடி ஜி அவர்கள். அந்த ஆட்சி மீண்டும் வரவேண்டும். பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்கள் மீண்டும் ஒரு முறை பிரதமராக வரவேண்டும் என்ற அடிப்படையில், மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசின் திட்டங்களாக மாற்றும் நடவடிக்கை இருக்கிறது. அந்தப் பிரமையை உடைத்து, இது மத்திய அரசின் திட்டங்களை வெளிப்படுத்துவோம்'' என்றார். 

முன்னதாக, மதுரை விமானநிலையத்தில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த ராதிகாவும் அவரது கணவர் சரத்குமாரும் கூறியதாவது, ‘’ விருதுநகர் வேட்பாளர் ராதிகா சரத்குமாரை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். வெற்றி வாய்ப்பு எங்களுக்கு இருக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்திருக்கிறோம்''என்றார்கள்.

அப்போது, தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை எதிர்த்து போட்டியிடுவது குறித்து, பாஜக வேட்பாளர் ராதிகா, ‘’எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துகள்’’ என்றார்.

முன்னதாக விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன்,  அதிமுக - தேமுதிக கூட்டணி சார்பில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கடந்த டிசம்பர் 28, 2023ல் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் மறைவுக்குப் பின், தேமுதிக இந்த தேர்தலைச் சந்திப்பதால் இத்தேர்தல் தேமுதிகவுக்கும், விஜயபிரபாகரனுக்கும் முக்கியமான தேர்தலாகப் பார்க்கப்படுகிறது.