Thalapathy Vijay: ‘15 வருஷத்துக்கு முன்னாடியே பிளான் போட்டாச்சு.. முழு மூளையும் எஸ்.ஏ.சிதான்’ -விஜய் மாமா!
Thalapathy Vijay: ஒரு கட்டத்தில் விஜய் அரசியலுக்கு வர மாட்டார் என்று தான் நானும் நினைத்தேன். ஆனால் விஜயின் பேச்சை எல்லாம் பார்க்கும் பொழுது அரங்கம் அதிர்கிறது. - விஜய் மாமா!

Thalapathy Vijay: விஜயின் அரசியல் வருகை குறித்து அவரது மாமாவும், ஒளிப்பதிவாளருமான ஆர். செல்வகுமார் ஜெம் சினிமாஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
அவர் நிச்சயம் வரவேண்டும்
அவர் அதில் பேசும் போது, ‘விஜய் ஒரு ஒன் மேன் ஷோ. அவர் என்ன முடிவு எடுத்தாலும், அந்த முடிவு தான் இன்று முக்கியமானதாக இருக்கிறது.ஒரு கட்டத்தில் விஜய் அரசியலுக்கு வர மாட்டார் என்று தான் நானும் நினைத்தேன். ஆனால் விஜயின் பேச்சை எல்லாம் பார்க்கும் பொழுது அரங்கம் அதிர்கிறது.
ஒரு விதத்தில் இது பாராட்டப்பட வேண்டிய விஷயம்; நம் பிள்ளை இவ்வளவு தூரம் வளர்ந்து இருக்கிறான் என்பதை நினைத்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அவரை நாங்கள் முழு மனதாக ஆதரித்துதான் ஆக வேண்டும் அவர் அதிகார கட்டிலில்அமர வேண்டும்.
வெளிவரவே இல்லை.
அவர் இப்படி அரசியலில் களம் இறங்கி அடுத்தடுத்து காய்களை நகற்றுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை; அந்த அதிர்ச்சியில் இருந்து எங்கள் குடும்பம் இன்னும் வெளிவரவே இல்லை. ஆனால் விஜயின் அப்பாவான எஸ் ஏ சி விஜயை அரசியலுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்கான திட்டத்தை 15 வருடங்களுக்கு முன்னதாகவே தீட்டி விட்டார். அதற்காக அவர் நிறைய முயற்சிகளை எடுத்தார்; அதன் மூலமாக நிறைய அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், அவருக்கும் பகை உண்டானது.
அப்பா மகனுக்குுள் ஆயிரம் மனஸ்தாபங்கள் இருந்தாலும், உள்ளுணர்வாக அவர்கள் அப்பா மகனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் பொழுது கூட தலைவர்கள் நிறைய பேர் இருந்தாலும், இவர்தான் முழுமையான ஒரே தலைவராக இருந்தார். எஸ் ஏ சியை பொறுத்தவரை எல்லாமே திட்டமிடல் பக்காவாக இருக்கும். அவர் ஒரு திரைப்படம் இயக்க இருந்தால் கூட, ரிலீஸ் தேதி முன்னதாகவே தெரிவிக்கப்பட்டு விடும்.
அவரிடம் இருந்து வந்த ஷங்கர், ராஜேஷ், பொன்ராம் உள்ளிட்ட எல்லோரும் அப்படித்தான் ஜெயித்திருக்கிறார்கள். விஜயை அரசியலுக்குள் இழுப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, விஜயை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள், விஜயிடம் இவ்வாறு செய்தால், படத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று சொல்ல, அதை எஸ்ஏசியிடம் வந்து விஜய் குமுறினார். இதையடுத்துதான் எஸ்.ஏ.சி அமைதியானார்.அவர் அமைதியானதையடுத்து தான் வீட்டிற்குள் பெரிய தகராறு ஏற்பட்டிருக்கிறது என்று கிளப்பி விட்டுவிட்டார்கள்.

டாபிக்ஸ்