புது பையன் என்று நகையாடிய இளையராஜா.. வாயை பிளக்க வைத்த மணிரத்னம்.. பகல் நிலவில் பந்தாடிய சினிமா படை! - தியாகராஜன்!
பகல் நிலவு படத்தில் நான் கமிட் ஆவதற்கு முன்பாக மணிரத்னம் இயக்கிய இரண்டு திரைப்படங்களையும் நான் பார்த்திருந்தேன்; அந்த திரைப்படங்களில் அவர் வைத்திருந்த ஷாட்ஸ், அவர் காட்சிகளை எடுத்திருந்த விதம் உள்ளிட்டவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. - தியாகராஜன்!

பகல் நிலவு திரைப்படத்தில் மணிரத்னம் குறித்து இளையராஜா சொன்னதையும், அதன் பின்னர் நடந்த சம்பவத்தையும் அதன் தயாரிப்பாளர் தியாகராஜன் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேசி இருக்கிறார்.
அவர் பேசும் போது, ‘நானும் மணிரத்னமும் ஒன்றாக படித்தவர்கள்; அதனால் எங்களுக்குள் நல்ல பழக்கம் இருந்தது. பகல் நிலவு படத்தில் நான் கமிட் ஆவதற்கு முன்பாக அவர் இயக்கிய இரண்டு திரைப்படங்களையும் நான் பார்த்திருந்தேன்; அந்த திரைப்படங்களில் அவர் வைத்திருந்த ஷாட்ஸ், அவர் காட்சிகளை எடுத்திருந்த விதம் உள்ளிட்டவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
பகல் நிலவு
அதனைத் தொடர்ந்து தான் நான் மணிரத்னத்தை பகல் நிலவு படத்தில் நான் கமிட் செய்தேன்; அந்தப் படத்தின் பொழுது, நாங்கள் எல்லோருமே குடும்பம் போல பழகி வந்தோம். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் எங்களுக்கு எந்தவித அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. ஆனால் அவருக்கு என்ன வேண்டுமோ அதை வாங்குவதில் மிகவும் பிடிவாதமாக இருந்தார்.