Suresh Kamatchi: 'பாலா நெனச்சத செய்யாம விட மாட்டாரு.. எல்லாம் போன பின்னாடி தான் கத்துக்க முடியுது'- சுரேஷ் காமாட்சி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Suresh Kamatchi: 'பாலா நெனச்சத செய்யாம விட மாட்டாரு.. எல்லாம் போன பின்னாடி தான் கத்துக்க முடியுது'- சுரேஷ் காமாட்சி

Suresh Kamatchi: 'பாலா நெனச்சத செய்யாம விட மாட்டாரு.. எல்லாம் போன பின்னாடி தான் கத்துக்க முடியுது'- சுரேஷ் காமாட்சி

Malavica Natarajan HT Tamil
Jan 20, 2025 02:12 PM IST

Suresh Kamatchi: ஒரு தயாரிப்பாளரா எல்லா காசும் போனதுக்கு அப்புறம் தான் படத்த ரிலீஸ் பண்றது எப்படின்னு கத்துக்க முடிவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.

Suresh Kamatchi: 'பாலா நெனச்சத செய்யாம விட மாட்டாரு.. எல்லாம் போன பின்னாடி தான் கத்துக்க முடியுது'- சுரேஷ் காமாட்சி
Suresh Kamatchi: 'பாலா நெனச்சத செய்யாம விட மாட்டாரு.. எல்லாம் போன பின்னாடி தான் கத்துக்க முடியுது'- சுரேஷ் காமாட்சி

வணங்கானுக்கு நல்ல ரெஸ்பான்ஸ்

வணங்கான் படம் தியேட்டரில் நல்லா ஓடிட்டு இருக்கு. நாங்க நெனைப்போம் நாம தயாரிக்குற எல்லா படமும் மக்களுக்கு பிடிக்கும்ன்னு. ஆனா ரியாலிட்டின்னு ஒன்னு இருக்கு. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான படத்த விரும்புவாங்க. ஒரு படத்தோட வெற்றி ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் மக்கள் குடுக்குற ரியாக்ஷன்ல தான் இருக்கு.

பெண்களுக்கு பிடிச்சிருக்கு

வணங்கான் படம் பெண்களுக்கு எல்லாம் பிடிக்குமான்னு யோசிச்சோம். ஆனா அவங்களுக்கு எல்லாம் பிடிச்சிருந்தது. அதில் சில அருவருப்பான காட்சிள் எல்லாம் இருந்தது. ஆனா அதை எல்லாம் அவங்க புரிஞ்சிட்டு ஏத்துகிட்டாங்க.

பாலா நெனச்சா நடக்கணும்

பாலா சார் அவரு மனசுல நெனச்சது வர்ற வரைக்கு் ஷீட்டிங் எடுப்பாரு. நெறைய பேர் சொல்லுவாங்க புரொடியூசருக்கு தேவையில்லாத செலவு வைக்க மாட்டாங்கன்னு. அதெல்லாம் கெடையாது. அவர் மனசுல இருக்குறது ஸ்கிரீன்ல வரணும்.

மதங்கள தள்ளி வையுங்க

படம் பாக்க வர்றவங்க மதத்தை கொஞ்சம் தள்ளி வச்சிட்டு வரணும். மதங்களுக்கு அப்பாற்பட்டது தான் மனிதம். எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கும், உங்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கும். நான் உங்கள தொந்தரவு பண்ணல. நீங்களும் என்ன தொந்தரவு பண்ணாதீங்க. யாரும் யாரையும் காயப்படுத்தக் கூடாது.

டைரக்டர் பாலா எல்லாம் ரொம்ப நகைச்சுவை உணர்வு உள்ள மனிதர். அவரு போட்டோவுக்கு போஸ் கொடுக்க கூட சிரிக்க மாட்டாரு. ஆனா, அவரோட பேசும் போது அதெல்லாம் அப்படியே மாறிடும். ரொம்ப நகைச்சுவையா இருக்கும். நாம அவர ரொம்ப கோவக்காரராகவே பாக்குறதால அவர் பற்றிய பார்வை அப்படியே இருக்கு.

படம் ரிலீஸ் பண்றது கஷ்டம்

பாலா சார் கூட வணங்கான் படம் பண்ணும் போது நான் என்த கஷ்டமும் படல. எனக்கு படம் ரிலீஸ் பண்ற சமயத்துல தான் எல்லா சேலஜ்வும் வந்தது. படம் பண்றது எல்லாம் என் கன்ட்ரோல்ல இருக்கு. ஆனா ரிலீஸ் என் கையில இல்ல. அத பத்தி எல்லாம் பேசுனா தேவையில்லாத பிரச்சனை வரும். அத தவிர்க்குறது தான் நல்லது.

முன்னெல்லாம் படம் தயாரிக்குறது மட்டும் தான் எங்க வேலை. மத்தது எல்லாம் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பாத்துப்பாங்க. ஆனா, இப்போ படத்த வாங்குறதுக்கு ஆள் இல்ல. அதனால, இப்போ நாங்களே டிஸ்ட்ரிபியூட்டர் ஆக வேண்டிய நிலை இருக்கு. இதெல்லாம் நெனச்சாலே பயமா இருக்கு. இந்த துறையில அனுபவம் இல்லாதததால் பணத்த இழந்து தான் எல்லாத்தையும் கத்துக்க வேண்டிய நிலை இருக்கு.

எல்லாம் புரொமோஷன் தான்

படம் ரிலீஸ் டேட் அறிவிச்சா படத்த வாங்க யாரும் வர மாட்டீங்குறாங்க. அதுக்கு பதிலா பஸ்ல புரொமேஷன் பண்றேன், ட்ரெயின்ல பண்றேன், இன்ஸ்டாகிராம்ல பண்றேன்னு காசு கேக்குற ஆளுங்க தான் இருக்காங்க.

இதெல்லாம் ரொம்ப அபாத்தானது. இதை எல்லாம் தவிர்த்து நாம படம் பண்ணுனா அதை அடிச்சு நகர்த்திட்டு போகவும் ரெடியா இருக்காங்க. இதையெல்லாம் தயாரிப்பாளர்கள் ஒன்னா உக்காந்து பேசி சரி பண்ணனும்.

கதை நல்லா இருக்குன்னா படம் ஓடிடும்ன்னு நெனச்சா அது தப்பு. அதுக்கும் ஹீரோ யாருங்குறது முக்கியமா இருக்கு.. அதுமட்டுமில்லாம புரொமோஷந் முக்கியமா இருக்கு.சில படத்துக்கு எதிரா கருத்து சொல்லி படத்த பத்தி பேச வைக்கலாம். சில படத்துக்கு என்ன பிரச்சனை பண்ண முடியும். அதெல்லாம் ரொம்ப சேலஜ்ஜா இருக்கும் என்றார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.