அஜித் கூட தான் என்னை ஏமாத்துனார்.. நேரில் பார்த்தால் இதைச் செய்வேன்.. தனுஷ்- நயன் இப்படி செய்யலாமா.. மாணிக்கம் நாராயணன்
அஜித் கூட தான் என்னை ஏமாத்துனார்.. நேரில் பார்த்தால் இதைச் செய்வேன்.. தனுஷ்- நயன் இப்படி செய்யலாமா என தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பேட்டியளித்துள்ளார்.

தனுஷுக்கும் நயன் தாராவுக்கும் பணமா இல்லை என்றும், மத்தியஸ்தரை வைத்து பேசித்தீர்க்காமல் தங்களோட தரத்தைத் தானே குறைச்சுக்கிறாங்க என திரைப்படத் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பேட்டியளித்துள்ளார். அஜித் கூட ஏமாற்றினார்.. அவரைப் பார்த்து நான் முறைக்கமாட்டேன் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் மீடியா சர்க்கிள் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’தனுஷ் - நயன்தாரா விவகாரத்தில் தனுஷ் ஒரு நடிகன். நயன்தாரா ஒரு நடிகை. ஒருத்தருக்கொருத்தர் பழக்கம் உள்ளவங்க. ஏன் ஒருத்தவங்க மேல் மண்ணை வாரி போடுறீங்க.
தனுஷ் என்பவருக்கு வெளியில் நல்ல இமேஜ் இருக்கா. எனக்கு தனிப்பட்ட முறையில் பழக்கமில்லை. தனுஷ் நல்ல முறையில் சம்பளம் வாங்கிறே. மேலும் மேலும் சம்பளம் வாங்கிட்டு இருக்க. அப்போது உன்னுடைய தரத்தை உயர்த்திக்கணும். உன்னுடைய எண்ணங்களை உயர்த்திக்கணும். உனக்கு இவ்வளவு சம்பளம் இருக்கும்போது, ஏன் இப்படி.