‘நடிகை ரம்பாவின் சொத்து மதிப்புதெரியுமா?’: உடைத்துப் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு
ராபர் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் தாணு, நடிகை ரம்பாவின் சொத்து மதிப்பினை பற்றி சொன்னது கோலிவுட்டில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

‘நடிகை ரம்பாவின் சொத்து மதிப்புதெரியுமா?’: உடைத்துப் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு
ராபர் திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
அதில் கலந்துகொண்ட திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பேசுகையில், ‘கவிதா சகோதரி என் மகள் என்று கூட சொல்லலாம். அவர் மேடையில் பேசினால் தமிழில் புதிய வார்த்தைகள் வரும். இரண்டு தினங்களுக்கு முன், எனக்கு போன் செய்து தான் இந்தப் படத்தைத்தயாரித்து இருப்பதாகச் சொன்னார். இதை முதலிலேயே சொல்லியிருந்தால், நான் நிறைய மிச்சம் செய்து கொடுத்து இருப்பேனே எனச் சொன்னேன்.
பாக்யராஜ் சாரை என்றும் போற்றி மகிழக் கூடியவன். பக்கத்தில் இருக்கும் ரம்பாவின் கணவர் 2ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதி. அவங்க இந்த மேடையில் உட்கார்ந்து இருக்கும்போது கண்கள் பனிக்கின்றது.
