Ponnurangam: ‘தோளில் கை போட்டதும் சம்பளம் கேட்டான்’ அஜித் பற்றி அமராவதி தயாரிப்பாளர் பேட்டி!
PRODUCER CHOLA PONNURANGAM: அமராவதி முடிந்ததும் அஜித்திற்கு அடுத்தடுத்து உடல்நிலை சரியில்லாமல் போனது. சினிமாவில், எவன் அழிவான் என்று தான் பார்ப்பான். ஆனால், அதிலிருந்தும் மீண்டது அஜித் தான்

புதியவர்களை சினிமாவில் அறிமுகம் செய்து, வாய்ப்பு வாசலை திறந்து வைத்த தயாரிப்பாளர், அஜித் உள்ளிட்ட பிரபலங்களை தமிழ் சினிமாவிற்கு தந்தவர் சோழா கிரியேசன்ஸ் பொன்னுரங்கம். அமராவதி படத்தில் அஜித்தை அறிமுகம் செய்த அவர், சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த சுவாரஸ்யமான பேட்டி இதோ:
‘‘1992ல் தலைவாசல் முடித்ததும், இயக்குனர் செல்வாவுக்கு பெரிய வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது கிடைக்கவில்லை. எனவே அவருக்காக அவசரமாக அடுத்த படம் எடுக்க நினைத்தேன். அது தான் அமராவதி.
இயக்குனர் செல்வா ஒரு காதல் கதை சொன்னார். அந்த கதைக்கு புது முகங்களை வைத்து பண்ணலாம் என்று கூறினேன். ஒரு ஓட்டலில் டிபன் சாப்பிடும் போது தான் அந்த கதையை பேசினோம். உடனே ஆட்களை தேடி பிடித்தோம். அனைத்து கதாபாத்திரங்களையும் எடுத்துவிட்டோம்.