ஜீவன் உண்மையிலேயே திருட்டுப்பையன் தான்.. செல்வா செய்த துரோகம்.. தயாரிப்பாளர் பாலாஜி பிரபு
ஜீவன் உண்மையிலேயே திருட்டுப்பையன் தான்.. செல்வா செய்த துரோகம் என தயாரிப்பாளர் பாலாஜி பிரபு குறித்த பேட்டியைக் காணலாம்.

நடிகர் ஜீவன் பற்றி தயாரிப்பாளர் பாலாஜி பிரபு மீடியா சர்க்கிள் யூட்யூப் சேனலுக்குப் பல்வேறு தகவல்களைக் கூறினார். அவையாவன, ‘’
தோட்டா படம் தோல்விக்குப் பின் பல கசப்பான நிகழ்வுகள் உள்ளன. தலைவாசல், அமராவதி ஆகியப் படங்களை இயக்கிய இயக்குநர் செல்வாவின் உதவி இயக்குநராக புதையல் என்கிற படத்திலும், சிஷ்யா படத்திலும் நான் பணியாற்றியிருக்கிறேன். அவருடைய நட்பு தொடர்புகொண்டு இருந்தது. பின், 2005ஆம் ஆண்டு, அவரது அலுவலகத்துக்கு என்னை அழைத்தார், இயக்குநர் செல்வா சார்.
அப்போது தான் கொஞ்சம் பண நெருக்கடியில் இருப்பதால், தனக்கு ஒரு லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டார். அதன்பின், நானும் அப்பாவிடம் பேசி, ஒரு லட்சம் ரூபாயை பணத்தை வாங்கிட்டுப்போய் கொடுத்துட்டு வந்துட்டேன். பிறகு ஒரு வாரம் கழிச்சு, நான் அவரை மீட் பண்ணும்போது, பாலாஜி நாம் ஒரு புது படம் தொடங்கலாமா என தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கேட்டார். உடனே, அந்த முடிவை நான் எடுக்க முடியாது என்பதால், அப்பாவிடம் வந்து கேட்டேன். என் அப்பாவும் அவர் நல்ல இயக்குநர் என நினைத்து ஒத்துக்கிட்டார். மறுநாள், அவரை அப்பாவின் அலுவலகத்துக்கு வரவழைத்தோம்.