அரவிந்த் சாமிக்கு மனிதாபிமானமே இல்ல.. திடீர் தளபதினு ஒருத்தர் வந்திருக்கார்.. பட்டங்கள் எதுக்கு?.. கிழித்த பாலாஜி பிரபு
அரவிந்த் சாமிக்கு மனிதாபிமானமே இல்ல.. திடீர் தளபதினு ஒருத்தர் வந்திருக்கார்.. பட்டங்கள் எதுக்கு?.. கிழித்த பாலாஜி பிரபு

அரவிந்த் சாமிக்கு மனிதாபிமானமே இல்லை என்றும்; திடீர் தளபதினு ஒருத்தர் வந்திருக்கார் என்றும் நடிகர்களுக்குப் பட்டங்கள் எதற்கு என்றும் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தயாரிப்பாளர் பாலாஜி பிரபு மீடியா சர்க்கிள் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’ அஜித் வந்து சில வருடங்களுக்கு முன்பே தன்னை தல என்று கூப்பிடவேண்டாம் என்று கூறிவிட்டார். தனது ரசிகர் மன்றத்தையும் கலைத்துவிட்டார். அவர் தன்னை நடிகனாக மட்டும் பாருங்கள். நான் நடிப்பதற்கு சம்பளம் வாங்குகிறேன். நீங்கள் என்னை தியேட்டரில் ரசிங்க, ஆனால், எனக்குப் பட்டம் கொடுப்பது, ரசிகர் மன்றம் வைப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை என்று தெளிவுபடுத்திவிட்டார்.
அப்படி அறிவிப்பு வெளியானதால், அஜித்துக்கு தன்னுடைய மார்க்கெட் குறைந்ததாக எனக்குத் தெரியவே இல்லை. அவருக்கும் பெரிய ஓபனிங் இருக்குது. வெறித்தனமான பெரிய ரசிகர்கள் கூட்டம் இன்னும் இருக்குது. அவர் சொன்னதால் இல்லாமல் போய்விடவில்லை. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கமல்ஹாசன் சார் போன வாரம் தான் தன்னுடைய எழுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடி இருக்கிறார்.
