Priyanka deshpande: ‘ஆமா உன்னை வெளியஅனுப்பனும்;வன்மத்தை கக்கிய பிரியங்கா - வெளியானது பகீர் ஆடியோ!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Priyanka Deshpande: ‘ஆமா உன்னை வெளியஅனுப்பனும்;வன்மத்தை கக்கிய பிரியங்கா - வெளியானது பகீர் ஆடியோ!

Priyanka deshpande: ‘ஆமா உன்னை வெளியஅனுப்பனும்;வன்மத்தை கக்கிய பிரியங்கா - வெளியானது பகீர் ஆடியோ!

Kalyani Pandiyan S HT Tamil
Published Sep 16, 2024 09:30 AM IST

Priyanka deshpande: பிரியங்கா மணிமேகலையை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நீ வெளியே போக வேண்டும் என்று பேசிய ஆடியோ வைரல் ஆகி வருகிறது.

Priyanka deshpande: ‘ஆமா உன்னை வெளியஅனுப்பனும்;வன்மத்தை கக்கிய பிரியங்கா! - வெளியானது பகீர் ஆடியோ!
Priyanka deshpande: ‘ஆமா உன்னை வெளியஅனுப்பனும்;வன்மத்தை கக்கிய பிரியங்கா! - வெளியானது பகீர் ஆடியோ!

அந்த வீடியோவில் அவர் மறைமுகமாக பிரபல தொகுப்பாளினி பிரியங்காவை குறிப்பிட்டு, அவரின் ஆதிக்கம் காரணமாகவே, நான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினேன் என்று கூறி இருந்தார். இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி படப்பிடிப்பில் இருவரும் சண்டை யிட்டது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆடியோ இங்கே:

15 வருட கால உழைப்பு:

முன்னதாக மணிமேகலை பேசும் போது, “நான் மீடியா துறைக்குள் நுழைந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த பொழுது, சன் மியூசிக் சேனலுக்குள் தொகுப்பாளினியாக பணியாற்றி, என்னுடைய மீடியா பயணத்தை தொடங்கினேன். அதிலிருந்து இப்போது வரை மீடியாவில் எனக்கு கிடைத்த வேலையை, முழு அர்ப்பணிப்போடு, உண்மையாக செய்து வந்திருக்கிறேன். கடந்த நான்கு வருடங்களாக நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று வந்தேன்.

கடந்த சீசனின் பாதியிலிருந்து அந்த சீசனை தொகுத்து வழங்க நான் நியமிக்கப்பட்டிருந்தேன். இந்த சீசனில் முழுவதுமாக அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நான் கமிட் செய்யப்பட்டிருந்தேன்.

சுய மரியாதை முக்கியம்

இவ்வளவு உழைப்பை நாம் போடுகிறோம். அதற்கான புகழ், பணம் உள்ளிட்டவை எனக்கு வருகிறது. ஆனால், இவை அனைத்தையும் கடந்த மிக முக்கியமான ஒன்று இருக்கிறது. அதுதான் என்னுடைய சுயமரியாதை. அதை விடுத்து வேறு எதை நீங்கள் கொடுத்தாலும் நான் அதற்காக இறங்கி வர முடியாது. இந்த சீசனில் தொடக்கத்தில் இருந்தே என்னுடைய வேலையில் ஒரு போட்டியாளரின் தலையீடு அதிகமாக இருந்தது. அதை முதல் இரண்டு எபிசோடுகளில் நிகழ்ச்சிக்காக நான் சகித்துக்கொண்டேன்

ஆனால், அது ஒரு எல்லையை கடக்கும் பொழுது, அதை நிகழ்ச்சி குழுவுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. சம்பந்தப்பட்டவரிடமும் முகத்திற்கு நேராகவே நீங்கள் செய்வது தவறு; என்னுடைய வேலையில் தலையிடாதீர்கள் என்று கூறினேன். ஆனால், அதற்கு அவர் நான் இத்தனை வருடமாக மீடியா துறையில் இருக்கிறேன்.

பிரியங்காவின் ஆதிக்கம்

என்னிடமே நீ அப்படி பேசுகிறாயா.. இதை எப்படி நான் அனுமதிக்க முடியும்.. இவள் என்னையே இப்படிக் கேட்டு விட்டாள் என்ற ரீதியில் குழுவிடம் அதனை அவர் எடுத்துச் சென்றார். அவர் என்ன வேண்டுமானாலும் இந்த ஷோவில் செய்வார். அதை நான் பொறுத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும் என்பதை என்னிடம் எதிர்பார்த்தார். அதை என்னால் கொடுக்க முடியவில்லை.

மணிமேகலை
மணிமேகலை

ஆனால், நிகழ்ச்சி குழுவில் இருந்து அவருக்கு ஆதரவாக பேசச் சொல்லி என்னிடம் கேட்டார்கள். அதாவது, அவர் நிகழ்ச்சியில் என்ன வேண்டுமென்றாலும் பேசிக்கொள்ளட்டும்.

நான் அமைதியாக இருப்பேன் என்று அவரிடம் நான் கூற வேண்டும் என்று கேட்டார்கள். அதை எப்படி நான் செய்ய முடியும். அப்படி கேட்டுதான் நான் இந்த நிகழ்ச்சியில் இருக்க வேண்டும் என்றால், அந்த நிகழ்ச்சியே எனக்குத் தேவையில்லை என்று கூறினேன்." என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: