Priyanka Chopra: ‘இழுத்து பிடித்து வாய்ப்பு கொடுக்கும்.. ரோஷன் குடும்பம் பற்றி சிலாகித்த பிரியங்கா சோப்ரா
சினிமாவில் வளராத என்னைப் போன்றவர்களை இழுத்து வாய்ப்புகளை கொடுக்கிறார்கள்; அதனால், அவர்களால் உருவாக்க முடிந்தவற்றிலிருந்து பயனடைவது அவர்கள் மட்டுமல்ல - பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா, சில ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட்டில் வாரிசு அரசியலுடன் எதிர்கொண்ட போராட்டம் குறித்து மனம் திறந்து பேசி இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரோஷன்ஸ் குடும்பம், அத்தகைய நெப்போட்டிசத்தை ஆதரிக்கவில்லை என்றும் அதனை தான் பாராட்டுவதாகவும் பேசியிருக்கிறார்.
மிகவும் பாராட்டுகிறேன்
நெட்ஃபிளிக்ஸ் இணையத்தொடரில் ரோஷன் குடும்பம் பற்றிய ஆவணப்படம் வெளியானது. அதில் பேசிய பிரியங்கா, ‘ உண்மையில் அவர்கள் தங்கள் அட்டவணையை நீளமாக்குகிறார்கள். சினிமாவில் வளராத என்னைப் போன்றவர்களை இழுத்து வாய்ப்புகளை கொடுக்கிறார்கள்; அதனால், அவர்களால் உருவாக்க முடிந்தவற்றிலிருந்து பயனடைவது அவர்கள் மட்டுமல்ல.அந்த அட்டவணை சிறியதாக இல்லை. அதனை நான் மிகவும் பாராட்டுகிறேன்" என்று பிரியங்கா பேசினார்.
ராகேஷ் இயக்கி தயாரித்த க்ரிஷ் (2006) மற்றும் க்ரிஷ் 3 (2013) ஆகிய படங்களில் ஹிருத்திக்கிற்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். அதே போல, கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரித்த கரண் மல்ஹோத்ராவின் அக்னி பாத் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
முன்னதாக பாலிவுட்டில் நிலவும் நெப்போடிசம் குறித்து பிரியங்கா பேசியது இங்கே!
முன்னதாக, ‘வெளியில் இருந்து திரைத்துறைக்கு உள்ளே வரும் நடிகர்களுக்கு எதிராக, இங்கே வாரிசு நடிகர்கள் வாய்ப்புகளை பறித்துக்கொள்வது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
உங்கள் மாமா படம் எடுக்க மாட்டார்
உங்களுக்காக உங்கள் மாமா படம் எடுக்க மாட்டார், இல்லையா? நீங்கள் அதைப் பெற வேண்டும்; அதற்காக நீங்கள் அவசரப்பட வேண்டும். அது ஒரு கவலையாக இருந்தது. அதன் காரணமாகவே நான் தயாரிப்பில் இறங்கினேன். ஆனால், அந்த ஆறு படங்களும் சரியாக ஓடாதபோது நான் மிகவும் பயந்தேன். ஏனென்றால், நான் ஒரு நெப்போட்டிச குழந்தை அல்ல. பாலிவுட் படங்களில் பெரிய அளவில் எனக்கு ஆதரவும் இல்லை’ என்று கூறினார்.
பிரியங்காவின் தாயார் மது சோப்ரா பேசும் போது, ‘ பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் கெரியர் வேலை செய்யாவிட்டால், அவரின் கெரியர் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காகதான் 2015ம் ஆண்டு பர்பிள் பெப்பிள் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியதாக கூறினார்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அவர் அண்மையில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அந்த வீடியோ அவர் படத்தில் இருக்கிறார் என்பதை உறுதிபடுத்தியது.
டொராண்டோவில் இருந்து துபாய் மற்றும் துபாயில் இருந்து ஹைதராபாத் செல்வது குறித்து பிரியங்கா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு ரீலை வெளியிட்டார். அதில் அவர் ஒரு ஓம் எமோஜியை பதிவிட்டு, RRR படத்தின் கர்ஜனை பாடலை இணைத்து இருந்தார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்