‘எதுவுமே இங்கு நிரந்தரம் கிடையாது.. தம்பி பாப்பாவுக்காக நான் எதுவும் செய்வேன்’- பிரியங்கா த்ரோபேக் பேட்டி!
ஈகா… அவள் தான் என்னுடைய தம்பியின் மகள். வீட்டிற்கு வரவேண்டும் என்று நினைக்கும் பொழுது, அவளுக்காக வரவேண்டும் என்று தோன்றுகிறது - பிரியங்கா த்ரோபேக்!

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே நேற்றைய தினம் டி ஜே வசி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்தத்திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிரியங்கா கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். அதற்கு பின்னதான காலம் பிரியங்காவின் சோகமான காலக்கட்டம். அந்த சமயத்தில் அவருக்கு பெருந்துணையாக இருந்தது அவர் தம்பி மகள் ஈகாவின் அன்புதான். அது குறித்து அவர் முன்னதாக கொடுத்த பேட்டிகளில் பேசியவற்றை இங்கே பார்க்கலாம்.
திமிராக இல்லை
அதில் அவர் பேசும் போது, “எதையுமே தலையில் தூக்கி வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. எதுவுமே இங்கு நிரந்தரம் கிடையாது. என்னிடமே நான் சொல்லிக்கொள்வது பிரியங்கா… உன்னை ஏமாற்றாத ஒரே விஷயம் தொழில் மட்டும்தான். இதிலிருந்து சம்பாதித்த மக்களை வைத்துக்கொண்டு ஓடிக்கொண்டே இரு. உனக்கு என்ன சேர வேண்டுமோ அது வந்து சேரும். ஜெயிச்சுட்ட மாறா என்ற வசனத்தை நான் சில பேருக்கு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.