Prakash Raj: '15 நாள்ல பதில் சொல்லியே ஆகணும்.. எல்லாரும் உண்மைய தெரிஞ்சிக்கணும்'- சூடான பிரகாஷ் ராஜ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Prakash Raj: '15 நாள்ல பதில் சொல்லியே ஆகணும்.. எல்லாரும் உண்மைய தெரிஞ்சிக்கணும்'- சூடான பிரகாஷ் ராஜ்

Prakash Raj: '15 நாள்ல பதில் சொல்லியே ஆகணும்.. எல்லாரும் உண்மைய தெரிஞ்சிக்கணும்'- சூடான பிரகாஷ் ராஜ்

Malavica Natarajan HT Tamil
Feb 02, 2025 09:14 AM IST

Prakash Raj: நடிகர் பிரகாஷ் ராஜ் கும்பமேளாவில் குளிப்பது போன்று எடிட் செய்யப்பட்ட படத்தை பரப்பியவர்கள் மீது பிரகாஷ் ராஜ் புகாரளித்துள்ளார்.

Prakash Raj: '15 நாள்ல பதில் சொல்லியே ஆகணும்.. எல்லாரும் உண்மைய தெரிஞ்சிக்கணும்'- சூடான பிரகாஷ் ராஜ்
Prakash Raj: '15 நாள்ல பதில் சொல்லியே ஆகணும்.. எல்லாரும் உண்மைய தெரிஞ்சிக்கணும்'- சூடான பிரகாஷ் ராஜ்

காவல் நிலையத்தில் புகார்

இதையடுத்து, தற்போது பிரகாஷ் ராஜ் தனது போலி படத்தை பரப்பியவர்கள் மீது மைசூருவில் உள்ள லட்சுமிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அத்துடன் தான் கும்பமேளாவில் குளிப்பது போன்று எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை முதலில் பரப்பிய பிரசாந்த் சாம்பார்கி மீது புகாரளித்ததின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய பிரகாஷ் ராஜ், "பிரசாந்த் சம்பந்தி பிரபலமானவரா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அவர் மக்களின் நம்பிக்கையை புண்படுத்துகிறார்கள். அவர்கள் எனக்கு எதிராக பல விஷயங்களில் பொய் செய்திகளை பரப்புகிறார்கள்.

15 நாட்களுக்குள் பதில்

அவர்கள் மீது வழக்கு போட்டுள்ளேன். எனவே பிரசாந்த் சம்பார்கி மீது புகார் அளித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தேன். அந்த நபர் 15 நாட்களுக்குள் காவல் நிலையத்திற்கு வந்து பதிலளிக்க வேண்டும். அனைவரும் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்" என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறினார்.

பாடம் புகட்ட வேண்டும்

அத்துடன், மைசூருவில் உள்ள லட்சுமிபுரம் காவல் நிலையத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் அளித்த புகாரின் பேரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரசாந்த் சம்பர்கி இதே மாதிரி பலரையும் தொந்தரவு செய்திருக்கிறார். இளைஞர் பாடம் புகட்ட வேண்டும். கடந்த காலங்களில் நடிகைகளுக்கு தொல்லை கொடுத்துள்ளார். இந்த மனிதனுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்.

பொய்யான பிரச்சாரத்தை பரப்பி, யாருடைய புகைப்படங்களையும் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது. இது மன்னிக்க முடியாத குற்றம். நீதி பற்றிய உண்மையை நான் தீவிரமாக யோசித்து வருகிறேன். கும்பமேளாவில் புனித நீராடலில் மக்கள் குளிப்பதில் என்ன தவறு இருக்கிறது. அது அவர்களின் நம்பிக்கை.

மனிதர்கள் இல்லாமல் வாழ முடியாது

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. நான் மனிதர்களை நம்புகிறேன். கடவுள் இல்லாமல் என்னால் வாழ முடியும். ஆனால் மனிதர்கள் இல்லாமல் வாழ முடியாது. அவர்களின் நம்பிக்கையை நான் கேள்விக்குள்ளாக்கவில்லை. அதை அரசியலுக்காக பயன்படுத்துவதும் தவறு.

அவர்களின் உணர்வுகளையும், பக்தியையும் சொல்லிக் கொண்டே போகட்டும். நான் யாரைப் பற்றியும் பேசவில்லை. நான் எந்த மதத்தையும் விமர்சிப்பதில்லை. என் மனைவியும், மகளும் கோவிலுக்கு சென்று ஹோமம் செய்கிறார்கள். ஆனால் என் நம்பிக்கையும் அவர்கள் நம்பிக்கையும் சேர்ந்து இணக்கமாக உள்ளன.

இவையெல்லாம் தெரியவில்லை

நான் மூட நம்பிக்கையை மட்டுமே கேள்வி கேட்பேன். கிறிஸ்தவர்களை விட பெரிய மாஃபியா யாரும் இல்லை என்று நான் கூறியுள்ளேன். முஸ்லிம்கள் மத்தியில் பெரிய பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் என்று நான் கூறியுள்ளேன். ஆனால், அது எல்லாம் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

நான் எப்போதாவது மதத்தைப் பற்றி பேசியிருக்கிறேனா? மதத்தை வளர்த்தெடுக்கும் பணி செய்து கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் வேலை. சாம்பார்கி யார் என்றே தனக்கு தெரியாது என்று மைசூரில் நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.