'சிவாஜி வீடு ஜப்திக்கு எதிரான வழக்கு'.. அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது - நடிகர் பிரபு திட்டவட்டம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'சிவாஜி வீடு ஜப்திக்கு எதிரான வழக்கு'.. அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது - நடிகர் பிரபு திட்டவட்டம்!

'சிவாஜி வீடு ஜப்திக்கு எதிரான வழக்கு'.. அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது - நடிகர் பிரபு திட்டவட்டம்!

Karthikeyan S HT Tamil
Published Apr 03, 2025 03:13 PM IST

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்ட வழக்கில், எனது வாழ்நாளில் இதுவரை ஒரு ரூபாய் கூட நான் கடன் வாங்கியது இல்லை. எனவே அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என பிரபு தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.

'சிவாஜி வீடு ஜப்திக்கு எதிரான வழக்கு'.. அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது - நடிகர் பிரபு திட்டவட்டம்!
'சிவாஜி வீடு ஜப்திக்கு எதிரான வழக்கு'.. அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது - நடிகர் பிரபு திட்டவட்டம்!

ராம்குமாருக்கு உதவ முடியாது - நடிகர் பிரபு

ஆனால், அதை நிராகரித்த பிரபு தரப்பு, ராம்குமார் நிறைய பேரிடம் கடன் வாங்கியுள்ளார். அவருக்கு உதவ முடியாது. ராம்குமார் வாங்கிய 3 கோடி ரூபாய் கடனுக்காக 3 ஆம் நபரான எனக்கு சொந்தமான ரூ.150 கோடி மதிப்பிலான வீட்டை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனது வாழ்நாளில் இதுவரை ஒரு ரூபாய் கூட நான் கடன் வாங்கியது இல்லை. எனவே அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என பிரபு தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி அப்துல் குத்தூஸ் வழக்கு விசாரணையை ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

நடந்தது என்ன?

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த் அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் ஈசன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் படமொன்றை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் படி, அவர்கள் கடந்த 2018ம் ஆண்டு வெளியான ‘ஜகஜால கில்லாடி’ படத்தை தயாரித்திருந்தனர். இதில், நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

யாரிடம் கடன் வாங்கப்பட்டது?

இந்தப்படத்திற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை துஷ்யந்த் தரப்பு கடனாக வாங்கி இருந்தனர். இந்தக்கடனை ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், துஷ்யந்த் தரப்பு கடனை கொடுக்காத காரணத்தால், தன்பாக்கியம் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்தியஸ்தராக நீதிபதி ரவீந்திரன் நியமிக்கப்பட்டார்.

அவர் விசாரணை நடத்தி கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை துஷ்யந்த் தரப்பிடம் இருந்து வசூல் செய்ய ஏதுவாக, ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் நிறுவனத்திடம் ஒப்படைக்கும்படி கடந்த 2024ம் ஆண்டு மே 4ம் தேதி உத்தரவிட்டார்.

உரிமைகளை கொடுக்க உத்தரவு

அத்துடன் படம் தொடர்பான உரிமைகளை விற்று கடனை ஈடு செய்து கொள்ளுங்கள் என்றும் மீதி தொகையை ஈசன் புரொடக்‌ஷன்ஸ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். இதனையடுத்து தன்பாக்கியம் படத்தின் உரிமைகளை கோரிய போது படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில், படம் முழுமையடையவில்லை எனக் கூறி பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, அதனை பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.