24 Years of Eazhaiyin Sirippil: ட்ரெண்ட் பாடல் ‘கரு கரு கருப்பாயி’! மூன்று நாயகிகளுக்கு கல்தா கொடுக்கும் பிரபுதேவா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  24 Years Of Eazhaiyin Sirippil: ட்ரெண்ட் பாடல் ‘கரு கரு கருப்பாயி’! மூன்று நாயகிகளுக்கு கல்தா கொடுக்கும் பிரபுதேவா

24 Years of Eazhaiyin Sirippil: ட்ரெண்ட் பாடல் ‘கரு கரு கருப்பாயி’! மூன்று நாயகிகளுக்கு கல்தா கொடுக்கும் பிரபுதேவா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 04, 2024 06:30 AM IST

ஏழையில் சிரிப்பில் படத்தில் வரும் கரு கரு கருப்பாயி பாடல் இன்று மட்டுமல்ல, படம் வெளியான காலகட்டத்திலும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்த பாடலாகவே இருந்தது. விஜய்யின் லியா படத்தால் மீண்டும் புத்துயிர் பெற்று பலரையும் ரீல்ஸ் மூலம் ஆட வைத்துள்ளது.

ஏழையின் சிரிப்பில் திரைப்படம்
ஏழையின் சிரிப்பில் திரைப்படம்

காதல், காமெடி, செண்டிமெண்ட், எமோஷன் என அனைத்து பொருந்திய பக்கா மசாலா படமாக ஏழையின் சிரிப்பில் படம் உருவாக்கப்பட்டிருக்கும். ரோஜா, கவுசல்யா, சுவலட்சுமி என மூன்று ஹீரோயின்கள் படத்தில் நடித்திருப்பார்கள். நாசர், விவேக், ரஞ்சித், பாண்டு, காக்கா ராதா கிருஷ்ணன், இந்து, பூவிலங்கு மோகன் உள்பட பலரும் படத்தில் நடித்திருப்பார்கள்.

தனியார் பஸ் கம்பெனியில் கூலியார பணிபுரியும் பிரபுதேவா, தனியாக பேருந்து நிலையத்தில் தவிக்கும் பெண்ணுக்கு உதவி செய்கிறார். ஆனால் அந்த உதவி பெண்ணுக்கு பாதிப்பை ஏற்படுத்த மனநலம் பாதிக்கப்படுகிறார். தன்னால் பாதிக்கப்பட்ட பெண்ணை பிரபுதேவா காப்பாற்றுவது தான் படத்தின் மையக்கதை.

இந்த கதையுடன் பிரபுதேவாவை ஒரு தலையாக காதலிக்கும் ரோஜா, பிரபுதேவாவின் முதலாளியாக வரும் நாசர் மகள் கவுல்சாவுக்கும் அவருக்கும் இடையிலான உறவ ஆகியவற்றை சுவாரஸ்ய குறையாத திரைக்கதையுடன் படத்தை எடுத்திருப்பார்கள்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் பேருந்து நிலையத்தில் வைத்து நடக்கும் விதமாக இருக்கும். அதற்கு ஏற்றார் போல் பஸ் ஸ்டாண்டை மையப்படுத்திய கதாபாத்திரங்கள் படம் முழுவதிலும் ஆக்கிரமிக்கும்.

முதலாளி நாசரின் விஸ்வாசம் மிக்க தொழிலாளியாக பிரபுதேவாவின் நடிப்பு காமெடி, வெகுலித்தனம், பயம் என கலந்து ரசிக்கும் விதமாக இருக்கும். லாட்டரி டிக்கெட் விற்கும் பெண்ணாக வரும் ரோஜா, பிரபுதேவாவை ஒரு தலையாக காதலிப்பதும், அவர் செல்லும் இடமெல்லாம் போய் லூட்டி அடிப்பது என கலக்கவும், பிரபுதேவாவை இன்னொரு பெண்ணுக்காக விட்டுக்கொடுப்பது என கலங்கவும் வைத்திருப்பார்.

காமெடிக்கு விவேக், அனுமோகன், பாண்டு, மயில்சாமி என பலரும் காட்சிக்கு காட்சி தோன்றி வயிற்றை புண்ணாக்கும் விதமாக இயல்பான நகைச்சுவையை வெளிப்படுத்தியிருப்பார்கள். பிரபுதேவா மீது அக்கறையும், பிரிவும் காட்டும் கதாபாத்திரத்தில் கவுசல்யாவின் நடிப்பு க்யூட்டாக இருக்கும். பிரபுதேவா முதலாளியாக வரும் நாசர் காட்சிகளுக்கு ஏற்ப தேவைப்படும் எமோஷன்களை வெளிப்படுத்தியிருப்பார். பிளாஷ்பேக், இரண்டாம் பாதியில் தோன்றும் சுவலட்சுமி, ராஜ்கபூர் கதாபாத்திரம் திருப்புமுனையை ஏற்படுத்தும் விதமாக இருக்கும்.

படத்துக்கு தேனிசை தென்றால் தேவா இசையமைத்திருப்பார். கே.சுபாஷ், நா. முத்துக்குமார், பழநிபாரதி பாடல் வரிகள் எழுத அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. லியோ படத்தின் ஒலித்து ட்ரெண்டான கரு கரு கருப்பாயி பாடல் இந்த படத்தில் தான் இடம்பிடித்துள்ளது. இப்போது மட்டுமல்ல, இந்த படம் வெளியானபோது கரு கரு கருப்பாயி பாடல் சூப்பர் ஹிட்டாக அமைந்ததோடு டிவிக்களில் அடிக்கடி ஒளிப்பரப்பாகும் பாடலாகவே இருந்தது. அதேபோல் யப்பா யப்பா ஐயப்பா பாடலும் சூப்பர் ஹிட்டானதோடு, எவர்கீரின் பாடலாக உள்ளது.

இந்த படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து மூன்று ஹீரோயின்கள் நடித்த போதிலும், யாருடனும் அவர் சேரமாட்டார். படத்தின் க்ளைமாக்ஸில் யாருமே எதிர்பார்த்திராத டுவிஸ்ட் மூலம் படத்தை முடித்து க்ளாப்ஸ்களை அள்ளியிருப்பார்கள். மூன்று ஹீரோயின்கள் இருந்தும் அவர்களுக்கு கல்தா கொடுத்து விட்ட அவுட் ஆஃப் சிலபஸாக இன்னொரு பெண்ணை கரம் பிடிக்கும் அந்த காட்சி கதைக்கு நியாயம் சேர்த்திருப்பதாக பாராட்டுகளும் குவிந்தன. ஆரம்பம் முதலே இறுதி வரை எவ்வித தொய்வும் இல்லாமல் விறுவிறுப்பாக செல்லும் சிறந்த டைம் பாஸ் படமாக இருக்கும் ஏழையின் சிரிப்பில் வெளியாகி இன்றுடன் 24 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.