SALAAR Part 2: ‘’நம்மளோட சிரிப்பு எதிரிகளை எரிச்சலை அடையச் செய்யணும்’’: சலார் 2 டிராப் தகவலுக்கு சிரித்த பிரபாஸ், நீல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Salaar Part 2: ‘’நம்மளோட சிரிப்பு எதிரிகளை எரிச்சலை அடையச் செய்யணும்’’: சலார் 2 டிராப் தகவலுக்கு சிரித்த பிரபாஸ், நீல்

SALAAR Part 2: ‘’நம்மளோட சிரிப்பு எதிரிகளை எரிச்சலை அடையச் செய்யணும்’’: சலார் 2 டிராப் தகவலுக்கு சிரித்த பிரபாஸ், நீல்

Marimuthu M HT Tamil Published May 26, 2024 04:36 PM IST
Marimuthu M HT Tamil
Published May 26, 2024 04:36 PM IST

SALAAR Part 2: பிரசாந்த் நீலின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சலார் இரண்டாம் பாகம்(சலார் 2) தயார் ஆவது நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் புதுத்தகவலை வெளியிட்டுள்ளது.

SALAAR: Part 2: ‘’நம்மளோட சிரிப்பு எதிரிகளை எரிச்சலை அடையச் செய்யணும்’’: சலார் 2 டிராப் தகவலுக்கு சிரித்த பிரபாஸ், நீல்
SALAAR: Part 2: ‘’நம்மளோட சிரிப்பு எதிரிகளை எரிச்சலை அடையச் செய்யணும்’’: சலார் 2 டிராப் தகவலுக்கு சிரித்த பிரபாஸ், நீல்

பல ரசிகர்கள் சலார் 2 படத்தின் அப்டேட் குறித்து கேட்டு வந்தனர். அதற்கு சரியான பதில் கிடைக்காதநிலையில், அதன் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டது என்று கருத்துப் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், அதன் சலார் 2ஆம் பாகம் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிரபாஸும் இயக்குநர் பிரசாந்த் நீலும் சிரித்துக்கொண்டு இருக்கும் படம் பகிரப்பட்டு, மறைமுகமாகப் பதில் உரைக்கப்பட்டுள்ளது. 

சலார் பார்ட் 1: சீஸ் ஃபயர், கடந்த ஆண்டு டிசம்பரில் திரையரங்குகளில் வெளியானது. ஷாருக்கானின் டங்கியுடன் இப்படம் ஒரே நேரத்தில் ரிலீஸாகி மோதியது. இது பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஹிட்டானது. 

சலார் பகுதி 2 குறித்த முக்கிய அப்டேட்:

பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் இணைந்து நடிக்கும் சலார் 1ஆம் பாகத்தின் தொடர்ச்சியான ’சலார் பகுதி 2: சௌர்யங்கா பர்வம்’ படப்பிடிப்பானது ஜூன் மாதம் தொடங்கும் என்று இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில் மே 26ஆம் தேதியான இன்று படத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பக்கப் பதிவில், பிரபாஸ் மற்றும் பிரசாந்த் நீல் ஆகியோர் இணைந்து, படப்பிடிப்பு தளத்தில் சிரித்து மகிழும் படத்தைப் பகிர்ந்துள்ளது. 

அந்தப் படத்தில் பிரபாஸ் பச்சை நிற ஜாக்கெட்டுடன், அடர் நீல நிற சட்டை அணிந்திருக்கிறார். அந்தப் பதிவில்"அவர்களால் சிரிப்பதை நிறுத்த முடியவில்லை" என்று கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தெலுங்கு 360 டிகிரி ஊடகம் வெளியிட்ட செய்தியில்,  "பிரசாந்த் நீல் மற்றும் பிரபாஸ் இடையே கருத்து வேறுபாடுகள்" இருப்பதால், சலார் 2 நிறுத்தப்படுவதாகப் பரிந்துரைத்தது.

ரசிகர்களின் ரியாக்ஷன்கள்:

இந்த புகைப்படத்திற்கு பதிலளித்த ரசிகர் ஒருவர், "ஒரே புகைப்படத்துடன் அனைத்து போலி வதந்திகளையும் நிறுத்திவிட்டீர்கள்" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர், "இது சலார் பகுதி 2 பற்றிய அனைத்து வதந்திகளும் கைவிடப்பட்டது தொடர்பானது" என்று கருத்து தெரிவித்தார். "இந்த திடீர் ஆனால் இனிமையான ஆச்சரிய புகைப்படத்திற்கு நன்றி" என்று மற்றொரு ரசிகர் கூறியுள்ளார்.

பிங்க்வில்லா உடனான ஒரு நேர்காணலில், பிரசாந்த் நீல், சலார்: பகுதி 2 - சௌர்யாங்க பர்வம் பற்றி மனம் திறந்திருந்தார். 

 '’தேவாவுக்கும் வரதாவுக்கும் இடையிலான நட்பையும் பகைமையையும் நான் சலார் 2வில் எப்படி முடிக்கபோகிறேன் என்பதில் தான்,  எனது முழு நோக்கமும் இருக்கிறது’’ என்றார்.

கற்பனையான டிஸ்டோபியன் நகர-மாநிலமான கன்சாரில் அமைக்கப்பட்ட சலார்: பகுதி 1- போர் நிறுத்தம் திரைப்படத்தில், தேவா (பிரபாஸ்) என்ற ஒரு பழங்குடியினருக்கும் (பிரபாஸ்) கான்சாரின் இளவரசரான வரதா (பிருத்விராஜ் சுகுமாரன்) ஆகியோருக்கும் இடையிலான நட்பைப் பேசியது. இப்படத்தில் ஸ்ருதிஹாசன், பாபி சிம்ஹா, ஜெகபதி பாபு, மைம் கோபி, ஜான் விஜய், ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி மற்றும் பலர் நடித்திருந்தனர்.