கூலி பட நடிகர் உபேந்திராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கூலி பட நடிகர் உபேந்திராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி!

கூலி பட நடிகர் உபேந்திராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி!

Malavica Natarajan HT Tamil
Published May 07, 2025 11:19 AM IST

பிரபல கன்னட நடிகரும் இயக்குநருமான உபேந்திராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து பெங்களூருவில் உள்ள ஸ்பர்ஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூலி பட நடிகர் உபேந்திராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி!
கூலி பட நடிகர் உபேந்திராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி!

வலி குறையாதததால் மருத்துவமனையில் அனுமதி

மே 5ஆம் தேதி பிற்பகல் அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. நெஞ்செரிச்சலால் அவதிப்பட்ட அவர், உடனடியாக முதலுதவி சிகிச்சை பெற்றார். சிறிது நேரம் கழித்தும் வலி குறையாததால், அருகிலுள்ள ஸ்பர்ஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று பிற்பகல் 3 மணியளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஓய்வெடுக்க அறிவுறுத்தல்

ஸ்பர்ஷ் மருத்துவமனையின் மருத்துவர்கள் நடிகரை முழுமையாக பரிசோதித்தனர். ஹைப்பர் அசிடிட்டியால் இந்த பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவித்தனர். மருத்துவமனையில் சிறிது நேரம் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். முன்னதாகவும் உபேந்திராவுக்கு இதேபோன்ற பிரச்சனை ஏற்பட்டது. யுஐ படப்பிடிப்பின் போது இதேபோன்ற அறிகுறிகள் தோன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

உபேந்திரா தகவல்

இதற்கிடையில், நடிகர் உபேந்திரா தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து அவரது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில், "அனைவருக்கும் வணக்கம்.. நான் நலமாக இருக்கிறேன்.. வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றேன்.. எந்த ஊகங்களையும் கண்டு குழப்பமடைய வேண்டாம்.. உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் மிக்க நன்றி." எனக் கூறி தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இயக்குநர் உபேந்திரா

உபேந்திரா நடித்து இயக்கிய யுஐ திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்த படம் திரையரங்குகளில் நல்ல வசூலைப் பெற்றது. இந்த படத்தில் எதிர்கால உலகம் எப்படி இருக்கும் என்பதை தனக்கே உரிய பாணியில் சொல்லியிருந்தார். உபேந்திரா, சிவராஜ்குமார் மற்றும் ராஜ் பி. ஷெட்டி நடிக்கும் 45 என்ற படம் இந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார்.

கூலி படம்

மேலும் இவர், தமிழில் லோகேஸஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகும் கூலி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்று கூலி படத்தின் படக்குழுவினர் படத்தின் ரிலீஸிற்கான கவுண்டவுனைத் தொடங்கி அதற்கான கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்ட நிலையில், இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரஜினியின் தீவிர ரசிகனான இவர், ரஜினி பக்கத்தில் வந்து நின்றால் கூட போதும் அந்தப் படத்தில் நான் நடிப்பேன். அந்தப் படத்திற்கான கதையைக் கூட தான் கேட்க மாட்டேன் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.