Poornima Bhagyaraj: எங்களுக்கு வந்த கஷ்டம்.. குடும்பத்தில் புத்தி சொல்ல பெரியவங்க இருக்கணும்.. பூர்ணிமா பாக்யராஜ் பேட்டி
Poornima Bhagyaraj: எங்களுக்கு வந்த கஷ்டம்.. குடும்பத்தில் புத்தி சொல்ல பெரியவங்க இருக்கணும் என பூர்ணிமா பாக்யராஜ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Poornima Bhagyaraj: எங்களுக்கு வந்த கஷ்டம் மாதிரி யாருக்கும் வரக்கூடாது என்று நடிகை பூர்ணிமா பாக்யராஜ் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
ஐபிசி மங்கை யூட்யூப் சேனலில் நடிகை பூர்ணிமா பாக்யராஜ், தன் வாழ்வில் நடந்த விஷயங்கள் குறித்து அளித்த சிறப்புப் பேட்டியின் தொகுப்பினைக் காணலாம்.
வெகுநாட்கள் நீங்கள் சினிமாவில் நடிக்காமல் விட்டுடீங்களே?
‘எனக்கும் அந்த வருத்தம் இருக்கு. அந்த டைமில் நாம் நினைச்சதை செய்ததுதான் சரின்னு நினைச்சிருக்கிறேன். அந்த சமயத்தில் ஃபேமிலியையும் சினிமாவையும் வெற்றிகரமாக எடுத்திட்டுப் போறது, கஷ்டமாக இருக்கும். அதனால், சினிமாவை முழுக்க விட்டுட்டேன். இன்றைய காலகட்டத்தில் இது பாஸிபிளான விஷயம் தான். அதனால் பாதியாவது சினிமாவில் இருந்திருக்கலாம். ஏனென்றால், மீண்டும் நடிக்க வரும்போது ஜெனரேஷன் கேப் ஆகிடுச்சு. இருந்தாலும் நான் திரும்பவும் நடிக்கிறது ஹேப்பியான விஷயம் தான்’.