‘அப்பா அம்மா எடுத்த சிறந்த முடிவு இதுதான்.. நிபந்தனையற்ற அன்பின் வரையறை நீ’- அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பூஜா!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பி! அம்மாவும் அப்பாவும் எடுத்த சிறந்த முடிவுகளில் ஒன்று, நீ முதலில் இருக்க வேண்டும், நான் இரண்டாவது இருக்க வேண்டும் என்பதுதான். - பூஜா கண்ணன்!

சாய் பல்லவி இன்று தன்னுடைய 33 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
எதிர்கொண்டிருக்க முடியாது.
இது குறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பி! அம்மாவும் அப்பாவும் எடுத்த சிறந்த முடிவுகளில் ஒன்று, நீ முதலில் இருக்க வேண்டும், நான் இரண்டாவது இருக்க வேண்டும் என்பதுதான். உண்மையாகச் சொல்கிறேன்; எனக்கு முன்னால் இருக்கும் சோதனைகளை நீ இல்லாமல் நான் நிச்சயம் எதிர்கொண்டிக்க முடியாது.
பல்லவி, நீ இல்லாமல் இந்த வாழ்க்கையில் ஒரு நாளைக் கூட என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. நீ இல்லாமல் இருந்தால், என் உலகத்திற்கு அர்த்தமில்லாமல் இருந்திருக்கும். நோக்கமில்லாமல் இருந்திருக்கும். மகிழ்ச்சியில்லாமல் இருந்திருக்கும். நிச்சயமற்ற இவ்உலகில், நீதான் என்னுடைய உறுதி.
அன்பின் வரையறை
நீ தன்னலமற்ற, தூய்மையான மற்றும் நிபந்தனையற்ற அன்பின் வரையறை ஆவாய். உங்கள் இதயத்தில் நீ எவ்வளவு அன்பைச் சுமக்கிறாய் என்பதை பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. உன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரையும் இவ்வளவு ஆழமாக கவனித்துக் கொள்ளும் அளவுக்கு உன் இதயத்தில் அவ்வளவு அன்பு இருக்கிறது.
நான் ஒப்புக்கொள்கிறேன், சில சமயங்களில் நீ எவ்வளவு அன்பைக் கொடுக்கிறாய் என்பதில் எனக்கு கொஞ்சம் பொறாமையும் அடைகிறேன்தான். ஆனால், நான் உங்களால் நேசிக்கப்படுவதற்கும், உங்களை என் சகோதரி என்று அழைப்பதற்கும் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். பெருமைப்படுகிறேன்.
இந்த பிறந்தநாளில், உலகில் இருக்கும் அனைத்து அன்பையும் மகிழ்ச்சியையும் நீ பெற விரும்புகிறேன். லவ் யூ பல்லவி!
மலர் டீச்சராக அறிமுகமாகிய சாய்
முன்னணி நடிகையான சாய் பல்லவி நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி.
தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறிய சாய் பல்லவிக்கு கடந்த ஆண்டு வெளியான அமரன் படம் பெரிய வரவேற்பை கொடுத்தது. அதனை தொடர்ந்து தண்டேல் படத்தில் நடித்த அவர் ஜுனைத் கான் நடிக்கும் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். ராமாயணத்தில் சீதையாகவும் நடிக்கிறார்.

டாபிக்ஸ்