கோர்டு வேர்டுக்கு அர்த்தம் என்ன? - போலீசில் ஆஜரான கிருஷ்ணாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை! - முழு விபரம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கோர்டு வேர்டுக்கு அர்த்தம் என்ன? - போலீசில் ஆஜரான கிருஷ்ணாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை! - முழு விபரம்!

கோர்டு வேர்டுக்கு அர்த்தம் என்ன? - போலீசில் ஆஜரான கிருஷ்ணாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை! - முழு விபரம்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 26, 2025 01:12 PM IST

கடந்த 2020ம் ஆண்டு முதல் வாட்ஸ் ஆஃப்பில் அழிக்கப்பட்ட குறும்செய்திகளை மீட்டும், கோர்டு வேர்டு மூலம் கிருஷ்ணாவிடம் பேசிய நபர்களை தொடர்பு கொண்டும் விசாரணை நடந்து வருகிறது.

கோர்டு வேர்டுக்கு அர்த்தம் என்ன? - போலீசில் ஆஜரான கிருஷ்ணாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை! - முழு விபரம்!
கோர்டு வேர்டுக்கு அர்த்தம் என்ன? - போலீசில் ஆஜரான கிருஷ்ணாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை! - முழு விபரம்!

அர்த்தம் என்ன?

போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான விசாரணைக்கு நடிகர் கிருஷ்ணா ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் ஆஜர் ஆகி இருக்கிறார். கிட்டத்தட்ட 20 மணி நேரத்திற்கு மேலாக காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் கிருஷ்ணா வாட்ஸ் ஆஃப்பில் நண்பரிடம் கோர்டு வேர்டில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

அதற்கான அர்த்தம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே போல கடந்த 2020ம் ஆண்டு முதல் வாட்ஸ் ஆஃப்பில் அழிக்கப்பட்ட குறும்செய்திகளை மீட்டும், கோர்டு வேர்டு மூலம் கிருஷ்ணாவிடம் பேசிய நபர்களை தொடர்பு கொண்டும் விசாரணை நடந்து வருகிறது.

முன்னதாக, அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருள் இல்லாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்பு உள்ளதா?

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவிற்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த போலீசார் ஆயத்தமான போது அவர் கேரளாவில் இருப்பதும், அவரது போன் ஸ்விட்ச் ஆப்பில் இருப்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று மாலை அவர் திடீரென போலீசில் ஆஜரானார்.

சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவருக்கு மருத்துவசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தனக்கு வயிற்றில் அலர்ஜி, வேகமாக இதயம் துடிப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதால் தன்னால் போதை பொருளை பயன்படுத்த முடியாது.

பிரசாத்துக்கும் எனக்கும் நேரடியான தொடா்பு கிடையாது. நானும் நடிகர் ஸ்ரீகாந்தும் நல்ல நண்பர்கள் மட்டுமே. விருந்து நிகழ்ச்சிகளில் நாங்கள் ஒன்றாக கலந்து கொண்டுள்ளோம். என்னை பற்றி ஸ்ரீகாந்த் சொன்னது அனைத்தும் தவறான தகவல். போதைப் பொருள் கும்பலுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.