Ajithkumar: இவ்வளவு பேர் வந்திருக்கீங்க.. எனக்கு ரொம்ப எமோஷனலா இருக்கு.. சண்ட போடாதீங்க..தோத்தா என்ன இப்ப' -அஜித்குமார்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajithkumar: இவ்வளவு பேர் வந்திருக்கீங்க.. எனக்கு ரொம்ப எமோஷனலா இருக்கு.. சண்ட போடாதீங்க..தோத்தா என்ன இப்ப' -அஜித்குமார்

Ajithkumar: இவ்வளவு பேர் வந்திருக்கீங்க.. எனக்கு ரொம்ப எமோஷனலா இருக்கு.. சண்ட போடாதீங்க..தோத்தா என்ன இப்ப' -அஜித்குமார்

Kalyani Pandiyan S HT Tamil
Jan 12, 2025 09:04 AM IST

கடுமையாக உழையுங்கள்; கடுமையாக விளையாடுங்கள். நாம் நமக்கு பிடித்த விஷயங்களில் ஈடுபடும் பொழுது, அதில் ஜெயிப்பது என்பது நல்ல விஷயம் தான். - அஜித் குமார்!

Ajithkumar: இவ்வளவு பேர் வந்திருக்கீங்க.. எனக்கு ரொம்ப எமோஷனலா இருக்கு.. சண்ட போடாதீங்க..தோத்தா என்ன இப்ப' -அஜித்குமார்
Ajithkumar: இவ்வளவு பேர் வந்திருக்கீங்க.. எனக்கு ரொம்ப எமோஷனலா இருக்கு.. சண்ட போடாதீங்க..தோத்தா என்ன இப்ப' -அஜித்குமார்

நன்றாக படியுங்கள்

அதில் அவர் பேசும் போது, ‘என்னுடைய மோட்டார் மீதான ஆர்வம் சிறுவயதில் ஆரம்பித்து இருந்தது. நிறைய ரசிகர்கள் என்னை தேடி இங்கு வந்திருந்தார்கள். எனக்கு மிகவும் எமோஷனலாக இருந்தது. நீங்கள் எல்லோரும் சந்தோஷமாக, மன நிம்மதியோடு ஆரோக்கியமாக வாழ்வதற்கு நான் அந்த கடவுளை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நீங்கள் உங்களது குடும்பத்தை பாருங்கள். உங்களது நேரத்தை வீணாக்காதீர்கள்; நன்றாக படியுங்கள்; உழைக்கிறவர்கள் நன்றாக உழையுங்கள்.

கடுமையாக உழையுங்கள்; கடுமையாக விளையாடுங்கள். நாம் நமக்கு பிடித்த விஷயங்களில் ஈடுபடும் பொழுது, அதில் ஜெயிப்பது என்பது நல்ல விஷயம் தான். ஒரு வேளை நீங்கள் அதில் ஜெயிக்கவில்லை என்றால், சோர்ந்து போக வேண்டாம் போட்டி என்பது மிக மிக முக்கியம். தன்னம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பை என்றுமே விட்டுக் கொடுக்காதீர்கள். உங்களை நான் அளவு கடந்து நேசிக்கிறேன்.

கார் ரேஸ் குறித்து

இந்த ரேஸானது பிற போட்டிகள் போல கிடையாது. பிற ரேஸ் போட்டிகளில் ஒரு டிரைவர், ஒரு கார் இருக்கும். ஆனால் இந்த விளையாட்டில், நான்கு பேரும் அந்த போட்டிக்கு பொறுப்பாவர். வாகனத்தை நாம் பொறுப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும்; அதே நேரத்தில் குறைந்த நேரத்திலும் போட்டி போட வேண்டும். இறுதியாக இதற்கும் ஒரு கூட்டு உழைப்பு என்பது தேவைப்படுகிறது. இதுவும் சினிமா துறையை போலத்தான். அவரவர்கள் அவர்களது கடமையை சரியாக செய்தாலே போதும் ரிசல்ட் தானாக வந்துவிடும். தயவுசெய்து சண்டை போட வேண்டாம். உங்களது குடும்பத்தை நீங்கள் நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்.

துபாயில் நடைபெற்று வரும் துபாய் 24H கார் ரேஸ் போட்டியில் நடிகர் அஜித் தன்னுடைய அஜித்குமார் ரேஸிங் அணியுடன் பங்கேற்று இருக்கிறார். இதற்கான பயிற்சியின் போது அவரது காரானது விபத்துக்குள்ளானது. இதனை முன்னிட்டு அவர் ரேஸில் இருந்து வீரராக விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக வெளியான அறிக்கை இங்கே!

அந்த அறிக்கையில், ‘நீண்ட சீசனுக்கு முன்னால் இருக்கும் சவால்களை கருத்திக்கொண்டு அணி இந்த முடிவை எடுத்திருக்கிறது. அணியின் உரிமையாளராகவும், அணியின் ஒருங்கிணைந்த பகுதியாகவும், அஜித் குமாரின் நல்வாழ்வும், அணிகளின் ஒட்டுமொத்த வெற்றியும் முதன்மையான விஷங்களாக இங்கு இருக்கின்றன.

அணியின் நலன் கருதி

ஆகையால் குழுவானது முழுமையாக ஆலோசனை செய்து, திட்டங்களில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அந்த மாற்றத்தின் படி, துபாய் 24H தொடரில் அஜித்குமார் வீரராக பங்குகொள்ள வில்லை என்ற தன்னலமற்ற முடிவை எடுத்திருக்கிறார்.

தன்னுடைய தனிப்பட்ட அபிலாஷைகளை ஒதுக்கி வைத்து விட்டு அஜித் இந்த முடிவை எடுத்திருப்பது அணியின் நலனுக்காதான். உண்மையான விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தும் இத்தகைய செயல்கள், அவரது அணிக்கும், ரசிகர்களுக்கும் ஒரு நிலையான உத்வேகமாக இருக்கும்.

ஓட்டுநராக எப்போது பார்க்கலாம்

மோட்டார் ஸ்போர்ட்டின் மீதான அபரிதமான ஆர்வம் கொண்ட அஜித்குமார் துபாய் 24H சீரிஸில் தொடர்ந்து பங்கேற்பார். போர்ஷே 992 கப் காரில் (நம்பர் 901) பாஸ் கோட்டனின் அஜித்குமார் ரேசிங்கின் உரிமையாளராக அஜித் உள்ளார். அதே நேரத்தில் போர்ஷேயில் ரஸூனின் கேமன் ஜிடி4 (நம்பர் 414) அஜித்குமார் ரேசிங்கிற்கு நிகழ்வில் போட்டியிடுகிறார்.

அஜித்தின் இந்த முடிவை துபாய் 24H சீரிஸ் அமைப்பாளர்களால் பாராட்டியுள்ளனர். அஜித் அங்கு இருப்பது போட்டிக்கு கூடுதல் உற்சாகத்தையும் தருகிறது. தன்னுடைய இரு அணிகளுக்காகவும் அஜித் களத்தில் இருப்பது அங்கிருக்கும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்துவதாக அமைந்துள்ளது.

மோட்டார் ஸ்போர்ட் தொடர்ந்து பிரபலமடைந்து வருவதால், அஜித்குமாரின் அர்ப்பணிப்பு ரசிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக மாறியுள்ளது. தான் ஏற்றிருக்கும் இந்த இரண்டு பொறுப்புகளையும் சரியாக செய்ய அவர் எடுத்திருக்கும் இந்த முடிவு ரசிகர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சி தரக்கூடியது என்பது உறுதி.’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.