HBD Singer Chitra: சின்னக்குயில், கானக்குயில், வானம் பாடி..! ரசிகர்கள் மனதில் ரீங்காரமாய் ஒலிக்கும் பாடகி சித்ரா
சின்னக்குயில், கானக்குயில், வானம் பாடி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் பாடகியாக இருப்பவர் பி.எஸ். சித்ரா. நான்கு தசாப்தங்களாக ரசிகர்கள் மனதில் ரீங்காரமா்ய ஒலிக்கும் குரலாக இருக்கிறார்.

ரசிகர்கள் மனதில் ரீங்காரமாய் ஒலிக்கும் பாடகி சித்ரா
சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் சிறந்த பின்னணி பாடகிக்கான குரலுக்கு சொந்தக்காரராக இருப்பவர் பாடகி சித்ரா. சின்னக்குயில் சித்ரா என்றே அன்போடு அழைக்கப்பட்ட இவர், பலரது மனதில் ரீங்காரமாய் ஒலிக்கும் குரலாகவே இருந்து வருகிறார்.
பாடகி சித்ராவின் பின்னணி
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த பாடகி சித்ராவின் தந்தை வானொலியில் புகழ் பெற்ற பாடகரான கிருஷ்ணன் நாயர். இவரது தாய் வீணை வித்தகர் சாந்தகுமாரி. இசைக்குடும்பத்தில் பிறந்ததாலோ என்னவே இவருக்கு இசை ஆர்வமானது இயல்பாகவே ஒட்டிக்கொண்டது.
சித்ராவின் தாயார் சிறு வயது முதலே அவரை பூஜை அறையில் நின்று பக்தி பாடல்களை பாட ஊக்கப்படுத்தினார். கர்நாடக சங்கீதத்தை முறையாக பயின்ற பாடகி சித்ரா, பிரபல பாடகர் டாக்டர் ஓமணக்குட்டி என்பவரிடம் முறைப்படி இசையும் பயின்றார்.