‘ரேவந்த் ரெட்டிக்கு பாராட்டு.. அல்லு அர்ஜூன் போதுமான நடவடிக்கை எடுத்திருக்கணும்.. காவல்துறையை குறை சொல்ல’- பவன் கல்யாண்!
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை பாராட்டுகிறேன். குறிப்பாக புஷ்பா 2 படத்தின் போது ரேவந்த் ரெட்டி திரையுலகிற்கு முழு ஆதரவு அளித்தார். டிக்கெட் விலையை உயர்த்த அனுமதிப்பது, தொழில்துறையின் வளர்ச்சியை பெரிதும் ஊக்குவித்துள்ளது - பவன் கல்யாண்!

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2: தி ரூல் படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்பட்டது. அதில் கலந்து கொள்ள அல்லு அர்ஜூன் அங்கு வந்ததால் அவரைக்காண ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். இந்த நெரிசலில், ரேவதி என்ற பெண்மணி உயிரிழந்தார். இதனையடுத்து இது தொடர்பாக அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசி இருக்கிறார்.
சினிமா என்பது ஒரு குழு முயற்சி.
குண்டூர் மாவட்டத்தில் மங்களகிரியில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சினிமா என்பது ஒரு குழு முயற்சி. எல்லோரும் அதன் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். ஆனால் இந்த வழக்கில் அல்லு அர்ஜுன் மட்டுமே தன்ந்தனியாக குற்றவாளியாக்கப்பட்டுள்ளார், இது சரியல்ல என்று நான் நம்புகிறேன்" என்றார்.
மேலும் பேசிய அவர், ‘அல்லு அர்ஜுன் படம் பார்க்க சென்றபோது, படத்தை திரையிட்ட தியேட்டர் நிர்வாகம் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்; இந்த விவகாரம் குறித்து ஊழியர்கள் அல்லு அர்ஜுனுக்கு முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும். அவர் உட்கார்ந்தவுடன், விஷயத்தை தெரிவித்து, தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்; இது அல்லு அர்ஜுனுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தாலும், கூட்டத்தின் பலத்த ஆரவாரங்களுக்கு மத்தியில் அவர் அதைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை.